திருப்பதி தேவஸ்தான சேனலில் ‘மார்கழி வைபவம்’ - திருப்பாவைக்கு பரத நாட்டியம் ஆடும் பிரணதி

திருப்பதி தேவஸ்தான சேனலில் ‘மார்கழி வைபவம்’ - திருப்பாவைக்கு பரத நாட்டியம் ஆடும் பிரணதி
Updated on
1 min read

திருப்பதி: ​​திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா பக்தி சேனலில் (எஸ்​விபிசி) ஆண்​டுதோறும் மார்​கழி மாதத்​தில் ஆண்​டாள் அருளிய திருப்​பாவை பாடல்​கள் தின​மும் ஒளி​பரப்​படு​வது வழக்​கம்.

இதனை தமிழ், தெலுங்​கு,கன்​னடம், ஹிந்தி ஆகிய 4 மொழிகளி​லும் ஒளிபரப்பி வரு​கின்​றனர். இதில் இம்​முறை ‘மார்​கழி வைபவம்’ எனும் பெயரில் ஒளி​பரப்​பாகி வரு​கிறது. முதலில் நாதஸ்வர இசை​யில் திருப்​பாவை ரங்​கோலி​யுடன் இணைந்து ஒளிபரப்​பாகிறது. பின்​னர் திருப்​பாவைக்​கான விளக்​கத்​துடன் அந்த நாளின் பாசுரம் ஒளி​பரப்​பாகிறது. இதனை தொடர்ந்து சென்​னையைச் சேர்ந்த 16 வயது பிரண​தி​யின் பரத​நாட்​டிய நடனத்​துடன் மிக​வும் ரம்​மிய​மாக திருப்​பாவை ஒளிபரப்​பாகிறது.

தின​மும் ஒரு பாசுரத்​துக்கு பிரண​தி​யின் நடனம் ஒரு முத்​தாய்​பாய் அமைந்​துள்​ளது. இதுகுறித்து எஸ்​விபிசி சேனல் நிகழ்ச்​சிகளின் தலைமை அதி​காரி​யான ஸ்ரீ ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறிய​தாவது: திருப்​பாவையை எளிய மக்​களும் புரிந்து கொள்​ளும் வகை​யில் இம்​முறை திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. முதலில் கோலத்​துடன் நாதஸ்வர இசை இடம்​பெறும்.

இதனை தொடர்ந்​து, திருப்​பாவைக்​கான விளக்​கம் கொடுக்​கப்​படும். அதன் பிறகு பிரண​தி​யின் பரத நாட்​டி​யம் மூலம் திருப்​பாவை பாசுரம் பிரசுரிக்​கப்​படும். நடனத்​துடன் கூடிய இசையை பலர் விரும்பி பார்க்​கின்​றனர். இதற்கு பக்​தர்​களிடையே நல்ல வரவேற்​பும் கிடைத்து வரு​கிறது. இம்​முறை, சென்​னையைச் சேர்ந்த சாஃப்ட்​வேர் நிறு​வனம் நடத்தி வரும் கோகுல கிருஷ்ணன் - கீதா தம்​ப​தி​யினரின் மகளான பிரணதிதான் ஆண்​டாள் இயற்​றிய 30 பாசுரங்​களுக்​கும் பரதம் ஆடி கொடுத்​துள்​ளார். இவ்​வாறு அவர் கூறி​னார்.

திருப்பதி தேவஸ்தான சேனலில் ‘மார்கழி வைபவம்’ - திருப்பாவைக்கு பரத நாட்டியம் ஆடும் பிரணதி
கடும் பனிமூட்டம்: டெல்லிக்கு ரெட் அலர்ட்; 128 விமானங்கள் ரத்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in