

பழநி: பழநி திரு ஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவின் 10 நாட்களும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஆறாம் நாளான 31-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு மேல் சுவாமி மணக் கோலத்தில் வெள்ளித் தேரோட்டமும் நடைபெற உள்ளது.
ஏப்.1-ம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்.4-ம் தேதி காலை 9 மணிக்கு திருவூடல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு மேல் கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.