

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களுக்கு இலவச மாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்ட இலவச லட்டு பிரசாதம் மீண்டும் வழங்கும் பணி தொடங்கியது.
அண்ணாமலையார் கோயிலுக்கு வணிக காஸ் சிலிண்டர் கிடைக்காததால் பிரசாதம் தயாரிக்க முடியாமல் இலவசமாகப் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லட்டு பிரசாதம் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவின்படி, கோயில் வளாகத்தில் இலவச லட்டு பிரசாதம் தொடர்ந்து வழங்க நடவடிக்கை மேற்கொண்டு, விறகு அடுப்பு மூலமாக லட்டு தயாரிக்கும் பணி நடைபெற்று, நேற்று காலை முதல் மீண்டும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பிரசாத விற்பனை நிலையத்தில் புளி சாதம் மற்றும் சர்க்கரை பொங்கல் மட்டுமே பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
லட்டு, அதிரசம், முறுக்கு, மிளகு வடை ஆகியவை வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் தயாரிக்க முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளது.