காரைக்கால் திருவிழாவில் மாங்கனிகளை வாரி இறைத்து வழிபாடு

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவையொட்டி பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா வந்த பிச்சாண்டவர். (அடுத்த படம்) கையில் மாங்கனியுடன் பிச்சாண்டவர் கோலத்தில் சிவபெருமான்.

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவையொட்டி பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா வந்த பிச்சாண்டவர். (அடுத்த படம்) கையில் மாங்கனியுடன் பிச்சாண்டவர் கோலத்தில் சிவபெருமான்.

Updated on
1 min read

காரைக்கால்: ​காரைக்​கால் அம்​மை​யார் மாங்​க​னித் திரு​விழா​வின் சிறப்​பு மிக்க நிகழ்​வாக, பக்​தர்​கள் பரவசத்​துடன் மாங்​க​னிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்​சாண்​ட​வர் வீதி​யுலா நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது.

63 நாயன்​மார்​களில் சிறப்​பிடம் பெற்​றவரும், சிவபெரு​மா​னால் அம்​மையே என்று அழைக்​கப்​பட்​டது உள்​ளிட்ட பல்​வேறு சிறப்​பு​களை கொண்​ட​வரு​மான காரைக்​கால் அம்​மை​யாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்​கும் வகை​யில், காரைக்​கால் கைலாச​நாத சுவாமி, நித்ய கல்​யாணப்​பெரு​மாள் வகையறா தேவஸ்​தானம் சார்​பில் ஆண்​டு​தோறும் மாங்​க​னித் திரு​விழா விமரிசை​யாக நடத்​தப்​பட்டு வரு​கிறது.

நிகழாண்டு விழா கடந்த 27-ம் தேதி மாப்​பிள்ளை (பரமதத்​தர்) அழைப்பு வைபவத்​துடன் தொடங்​கியது. நேற்று முன்​தினம் காலை அம்​மை​யார் கோயி​லில் புனிதவ​தி​யார்- பரமதத்​தர் திருக்​கல்​யாணம், இரவு கைலாச​நாதர் கோயி​லில் பிச்​சாண்​ட​வர் வெள்​ளை​சாற்றி புறப்​பாடு நடை​பெற்​றது.

2-வது நாள் நிகழ்​வாக கைலாச​நாதர் கோயி​லில் நேற்று அதி​காலை 3 மணியி​லிருந்து பிச்​சாண்​ட​வர், பஞ்​சமூர்த்​தி​களுக்கு மகா அபிஷேகம் செய்யப்​பட்​டு,மகா தீபாராதனைக்காட்​டப்​பட்​டது. தொடர்ந்து பரமதத்​தர் காசுக்​கடை மண்​டபத்​துக்கு (கடைத்​தெரு பொய்​யாத மூர்த்தி விநாயகர் கோயில்) வரும் நிகழ்வு நடை​பெற்​றது. பின்​னர் சிறப்​புமிக்க நிகழ்​வான பிச்​சாண்​ட​வர் வீதி​யுலா நடை​பெற்​றது.

இதையொட்டி சிவபெரு​மான், பிச்​சாண்​ட​வர் கோலத்​தில் கையில் மாங்​க​னி​யுடன், கைலாச​நாதர் கோயில் வாயி​லில் பவழக்​கால் சப்​பரத்​தில் எழுந்​தருளி​னார். பின்​னர் கைலாச​நாதர் கோயில் வாயி​லில் இருந்து வேத​பா​ராயணங்​கள் முழங்க, சிவபெரு​மானுக்​குரிய ராஜ வாத்​தி​யங்​கள் இசைக்க வீதி​யுலா புறப்​பாடு தொடங்​கியது.

கைலாச​நாதர் கோயில் வீதி, பார​தி​யார் சாலை, கன்​னடியர் வீதி, மாதா கோயில் வீதி வழி​யாக மாலை வரை நடை​பெற்ற வீதி​யுலா​வில் பல்​வேறு இடங்​களில் ஏராள​மான பக்​தர்​கள் கையில் மாங்​க​னி, பட்டு வஸ்​திரம், பூக்​கள் உள்​ளிட்​ட​வற்​றுடன் நீண்டவரிசை​யில் நின்​று, இறைவனுக்கு படைத்து வணங்​கினர். வீதி​யுலா​வின்​போது ஏராள​மான பக்​தர்​கள் தங்​கள் நேர்த்​திக்​கடனை செலுத்​தும் வித​மாக மாங்​க​னிகளை வீசி இறைத்து இறைவனை வழிபட்​டனர். அந்த மாங்​க​னிகளை இறைவனுக்​குப் படைக்​கப்​பட்ட பிர​சாத​மாகக் கரு​தி​யும், திரு​மணத் தடை, குழந்​தைப் பேறின்மை போன்ற நம்பிக்கையின்பேரிலும் தங்​கள் வேண்​டு​தல் நிறைவேறு​வதற்​காக​வும் பக்​தர்​கள் அவற்றை பிடித்து எடுத்​துச் சென்​றனர்.

விழா​வில் புதுச்​சேரி அமைச்​சர் ஜி.என்​.எஸ்​.​ராஜசேகரன், மாவட்ட ஆட்​சி​யர் இஷிதா ராட்​டி, சார் ஆட்​சி​யர் எம்​.பூஜா, புதுச்​சேரி டிஐஜி சத்​தி​யசுந்​தரம், எம்​எல்ஏ வி.விக்​னேஸ்​வரன், நிர்​வாக அதி​காரி (கோ​யில்​கள்) ஆர்​.சுப்​பிரமணி​யன், நிர்​வாக அதி​காரி சி.​வி​நாயகமூர்த்தி உள்​ளிட்ட பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்து கொண்​டனர்.

<div class="paragraphs"><p>காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவையொட்டி பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா வந்த பிச்சாண்டவர். (அடுத்த படம்) கையில் மாங்கனியுடன் பிச்சாண்டவர் கோலத்தில் சிவபெருமான்.</p></div>
“பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது” - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in