ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குரு பகவான் சந்நிதியில் பெயர்ச்சி விழா: லட்சார்ச்சனை நாளை தொடக்கம்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நேற்று  குரு பகவானுக்கு நடைபெற்ற தீபாராதனை.

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நேற்று  குரு பகவானுக்கு நடைபெற்ற தீபாராதனை.

Updated on
1 min read

திருவாரூர்: ஆலங்குடி ஆபத்​ச​காயேஸ்​வரர் கோயி​லில் உள்ள குரு பகவான் சந்​நி​தி​யில் குருப் பெயர்ச்சி விழா நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. குரு பகவான் நேற்று முற்​பகல் 11 மணி​யள​வில் மிதுன ராசி​யில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்​தார்.

இதை முன்​னிட்​டு, திரு​வாரூர் மாவட்​டம் ஆலங்​குடி​யில் உள்ள ஆபத்​ச​காயேஸ்​வரர் குரு பரி​கார கோயி​லில் குருப் பெயர்ச்சி விழா கோலாகல​மாக நடை​பெற்​றது. இதையொட்​டி, கோயி​லில் தனி சந்​நி​தி​யில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அலங்​காரம் செய்​யப்​பட்​டு, பூஜைகள் நடை​பெற்​றன.

தொடர்ந்து மகா தீபா​ராதனை நடை​பெற்​றது. இதில், ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்​டு, குரு பகவானை வழிபட்​டனர். பக்​தர்​கள் நெரிசல் இன்றி வழிபட கோயில் நிர்​வாகம் தரப்​பில் கோயில் வளாகத்​தில் தடுப்​பு​கள் அமைக்​கப்​பட்டு இருந்​தன.

தொடர்ந்​து, குருப் பெயர்ச்​சிக்​கான லட்​சார்ச்​சனை விழா நாளை (மே 28) தொடங்கி ஜூன் 4-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது.

அந்த நாட்களில் காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரை​யும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை​யும் லட்சார்ச்சனை நடை​பெறும்.

இந்த லட்​சார்ச்​சனை​யில் மேஷம், ரிஷபம், கடகம், சிம்​மம், துலாம், தனுசு, கும்​பம் ஆகிய ராசிக்​காரர்​கள் பங்​கேற்று பரி​காரம் செய்​து​கொள்​ளலாம் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நேற்று&nbsp; குரு பகவானுக்கு நடைபெற்ற தீபாராதனை.</p></div>
அணுசக்தி மின்திட்டங்களை செயல்படுத்த இந்திய அணுசக்தி கழகம் - என்எல்சி ஒப்பந்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in