வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய தேர் பவனி கோலாகலம்

மரியே வாழ்க முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பெரிய தேர் பவனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். தேரில் எழுந்தருளிய ஆரோக்கிய அன்னை.

வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பெரிய தேர் பவனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். தேரில் எழுந்தருளிய ஆரோக்கிய அன்னை.

Updated on
2 min read

நாகப்பட்டினம்: ​நாகை மாவட்டம் வேளாங் கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேராலய ஆண்​டுப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான பெரிய தேர் பவனி நேற்று இரவு கோலாகல​மாக நடை பெற்​றது. இதில் லட்​சக்​கணக்கான பக்​தர்​கள் கலந்​துகொண்டு மரியே வாழ்க என முழக்கமிட்டனர்.

வேளாங்​கண்​ணி​யில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்​கிய அன்னை பேரால​யத்​தில் மாதா பிறந்​த​நாள், ஒவ்​வொரு ஆண்​டும் 11 நாட்​கள் பெரு​விழா​வாக கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. அதன்​படி இந்த ஆண்​டுக்​கான பெருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

அதன்​பின் பேரால​யம், விண்​மீன் ஆலயம், மாதாகுளம் ஆலயம், மேல் கோயில், கீழ் கோயில் ஆகிய ஆலயங்​களில் தின​மும் காலை 5 மணிக்கு தமிழ், மராத்​தி, ஆங்​கிலம், கொங்​க​ணி, கன்​னடம், தெலுங்​கு, இந்​தி, கிழக்​கத்​திய மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்​பலி நடை​பெற்று வந்​தது. பல்​வேறு மாநிலங்​களில் இயற்கை சீற்​றத்​தால் உயி​ரிழந்​தவர்​களுக்​காக​வும், உலக அமை​திக்​காக​வும் இந்த நவ நாட்​களில் சிறப்பு பிரார்த்​தனை செய்​யப்​பட்​டது.

ஆண்​டுத் பெரு​விழா​வின் மிக முக்​கிய நிகழ்ச்​சி​யான பெரிய தேர் பவனி நேற்று மாலை நடை​பெற்​றது. அதை முன்​னிட்டு ஜெப​மாலை, மாதா மன்​றாட்​டு, நவநாள் ஜெபம் ஆகியவை நடைபெற்​றன. அதைத்​தொடர்ந்து சிறப்பு கூட்​டுப்​பாடல் திருப்​பலி நிறைவேற்​றப்​பட்​டது. பின்​னர் மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்ட பெரிய தேரில் மாதா சொரூபம் வைக்​கப்​பட்​டது. தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் தேரை புனிதம் செய்து வைத்​தார். பின்​னர் அவர் தலை​மை​யில் உலக நன்​மைக்​காக மும்மத பிரார்த்​தனை நடை​பெற்​றது.

அதைத்​தொடர்ந்​து, பெரிய தேரின் முன்பு 6 சிறிய தேர்​களில் மிக்​கேல் சம்​மனசு, செபஸ்​தி​யார், அந்​தோனி​யார், சூசையப்​பர், உத்​திரிய மாதா, அமலோற்பவ மாதா ஆகியோர் எழுந்தருளினர். இதையடுத்​து, ஆரோக்​கிய மாதா எழுந்​தருளிய பெரிய தேரை ஏராள​மான பக்​தர்​கள் சுமந்து சென்​றனர்.

வேளாங்​கண்ணி பேராலய முகப்​பில் இருந்து தொடங்​கிய பெரிய தேர்பவனி கடற்​கரை சாலை, ஆரிய​நாட்​டுத் தெரு, உத்​திரிய​மாதா தெரு, கடைவீதி வழி​யாக மீண்​டும் பேரால​யத்தை வந்​தடைந்​தது. அப்​போது, ‘மரியே வாழ்​க’, ‘ஆவே மரி​யா’ என பக்​தர்​கள் முழக்​கமிட்​டனர்.

தேர் பவனி​யில், பேராலய அதிபர் இருதய​ராஜ், உதவி அதிபர் அற்​புத​ராஜ் மற்​றும் தமிழகத்​தில் உள்ள பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்​தும், பிற மாநிலங்​கள் மற்​றும் வெளி​நாடு​களில் இருந்​தும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​றனர்.

விழாவை முன்​னிட்டு நாகை எஸ்பி கேழ்கர் சுப்​ரமணிய பாலச்​சந்​திரா தலை​மை​யில் 4 மாவட்​டங்​களைச் சேர்ந்த 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். பல்​வேறு மாநிலங்​களில் இருந்து சிறப்பு ரயில்​களும், தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து சிறப்பு பேருந்​துகளும் இயக்​கப்​பட்​டன.

தொடர்ந்​து, ஆரோக்​கிய மாதா​வின் பிறந்த நாள் விழாவை முன்​னிட்டு இன்று (செப்​.8) காலை பேரால​யத்​தில் சிறப்பு திருப்​பலி நடை​பெறுகிறது. அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி​யிறக்​கத்​துடன் திரு​விழா நிறைவு பெறுகிறது.

<div class="paragraphs"><p>வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பெரிய தேர் பவனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். தேரில் எழுந்தருளிய ஆரோக்கிய அன்னை. </p></div>
அக்.6-ல் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in