ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 3 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி

ஆஞ்சநேயருக்கு நேற்று நடை​பெற்​ற புஷ்​பாஞ்​சலி.

ஆஞ்சநேயருக்கு நேற்று நடை​பெற்​ற புஷ்​பாஞ்​சலி.

Updated on
1 min read

நாமக்​கல்: ஆங்​கிலப் புத்​தாண்டை முன்​னிட்டு நாமக்​கல் ஆஞ்​சநேயர் சுவாமிக்கு 3 டன் மலர்​களால் புஷ்​பாஞ்​சலி நடை​பெற்​றது.

நாமக்​கல் கோட்டை சாலை​யில் பிரசித்தி பெற்ற ஆஞ்​சநேயர் சுவாமி கோயில் அமைந்​துள்​ளது. ஆங்​கிலப் புத்​தாண்டை முன்​னிட்டு நேற்று அதி​காலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்​கப்​பட்​டு, ஆஞ்​சநேயருக்கு வடை​மாலை சாத்​துபடி செய்​யப்​பட்டு தீபா​ராதனை நடை​பெற்​றது. தொடர்ந்​து, நல்​லெண்​ணெய், சீயக்​காய், திரு​மஞ்​சள், 1,008 லிட்​டர் பால், தயிர், பஞ்​சாமிர்​தம், மஞ்​சள், சந்​தனம் உள்​ளிட்​ட​வற்​றால் ஆஞ்​சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது. கனகாபிஷேகத்​துடன் அபிஷேகம் நிறைவு பெற்​றது.

தொடர்ந்​து, காலை 5 மணி​யள​வில் சுவாமிக்கு துளசி, முல்​லை, மல்​லிகை, அரளி, அல்​லி, ரோஜா என 3 டன் எடை கொண்ட பல்​வேறு வகை​யான மலர்​கள் கூடை கூடை​யாக தூவப்​பட்டு சிறப்பு புஷ்​பாஞ்​சலி நடை​பெற்​றது. பின்​னர், ஆஞ்​சநேய சுவாமி தங்​ககவச அலங்​காரத்​தில் பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார். நாமக்​கல் மட்​டுமின்​றி, பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்​தும் வந்​திருந்த பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

<div class="paragraphs"><p>ஆஞ்சநேயருக்கு நேற்று நடை​பெற்​ற புஷ்​பாஞ்​சலி.</p></div>
பொங்கலுக்கு பின் கூட்டணி நிலை குறித்து உறுதியான தகவல் வெளியாகும்: நயினார் நாகேந்திரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in