நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றம்: 28-ம் தேதி தேரோட்டம் நடத்த சிறப்பு ஏற்பாடுகள்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொடியேற்றத்துக்குப்பின் நடைபெற்ற தீபாராதனை. படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொடியேற்றத்துக்குப்பின் நடைபெற்ற தீபாராதனை. படம்: மு.லெட்சுமி அருண்.

Updated on
1 min read

திருநெல்வேலி:​ திருநெல்​வேலி நெல்​லை​யப்​பர் கோயில் ஆனிப் பெருந்​திரு​விழா கொடியேற்​றத்​துடன் கோலாகல​மாக நேற்று தொடங்​கியது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

தமிழகத்​தில் பிரசித்தி பெற்ற சிவால​யங்​களில் ஒன்​றான இக்​கோயி​லில் நடை​பெறும் விழாக்​களில் ஆனி பெருந்​திரு​விழா சிறப்​புமிக்​கது. இத்​திரு​விழா​வின் சிகர நிகழ்ச்​சி​யாக ஆசி​யா​விலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்​லை​யப்​பர் தேர் உள்​ளிட்ட 5 தேர்​களை லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கூடி வடம்​பிடித்து இழுத்து நிலை​யம் சேர்ப்​பர்.

இவ்​வாண்​டுக்​கான ஆனி பெருந்​திரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. அதி​காலை​யில் கோயில் நடை திறக்​கப்​பட்​டு, சுவாமி நெல்​லை​யப்​பர், காந்​தி​மதி அம்​பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. தொடர்ந்​து, தங்க பூங்​கோ​வில் சப்​பரத்​தில் சுவாமி நெல்​லை​யப்​பர், காந்​தி​மதி அம்​பாள் சிறப்பு அலங்​காரத்​தில் எழுந்​தருளி, கோயில் திரு​விழா மண்​டபத்​துக்கு எழுந்​தருளினர். பின்​னர், பெரிய தங்க கொடி மரத்​தின் முன்பு சிறப்பு வழி​பாடு நடத்​தப்​பட்​டு, கொடிபட்​டத்​துக்கு சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. வேத மந்​திரங்​கள் முழங்க, பஞ்ச வாத்​தி​யம் இசைக்க, கோயில் பெரிய தங்க கொடிமரத்​தில் கொடியேற்​றம் நடை​பெற்​றது.

கொடி மரத்​துக்கு சிறப்பு அலங்​காரம் செய்​யப்​பட்​டு, பால், மஞ்​சள், தயிர், இளநீர் உள்​ளிட்டசிறப்பு அபிஷேக திர​வி​யங்​கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது. இதைதொடர்ந்து சோடச உபச்​சார மகாதீ​பா​ராதனை நடை​பெற்​றது. இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

இத்திரு​விழா வரும் 29-ம் தேதி நடை​பெறுகிறது. விழா நாட்​களில் தின​மும் காலை​யும், இரவும் வெவ்​வேறு அலங்​கரிக்​கப்​பட்ட வாக​னங்​களில் சுவாமி, அம்​பாள் வீதி​யுலா நடை​பெறுகிறது. திரு​விழா​வில் சுவாமி நெல்​லை​யப்​பர், காந்​தி​மதி அம்​பாள் வெள்ளி ரிஷப வாக​னத்​தில் எழுந்​தருளும் நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி​யும், தங்க சப்​பரத்​தில் கங்​காள நாதர் எழுந்​தருளி வீதி​யுலா வரும் 27 -ம் தேதி​யும் நடை​பெறுகிறது. சிகர நிகழ்ச்​சி​யான தேரோட்​டம் வரும் 28-ம் தேதி நடை​பெறுகிறது. இதற்​கான ஏற்​பாடு​களை கோயில்​ நிர்​வாகம்​ சிறப்​பாகச் செய்​து வருகிறது.

<div class="paragraphs"><p>திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொடியேற்றத்துக்குப்பின் நடைபெற்ற தீபாராதனை. படம்: மு.லெட்சுமி அருண்.</p></div>
“என் செல்வாக்கை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்” - ட்ரம்புக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பதிலடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in