​திருவள்ளுவர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: மயிலாப்பூரில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயில் கோபுர கலசத்தில் நேற்று புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். | படங்கள்: ம.பிரபு |

சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயில் கோபுர கலசத்தில் நேற்று புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். | படங்கள்: ம.பிரபு |

Updated on
1 min read

சென்னை: மயி​லாப்​பூர் திரு​வள்​ளுவர் கோயில் கும்​பாபிஷேக விழா கோலாகல​மாக நடை​பெற்​றது. திரு​வள்​ளுவர் பிறந்​த​தாகக் கருதப்​படும் சென்னை மயி​லாப்​பூரில் சுமார் 1,300 ஆண்​டு​கள் பழமை​யான அவரது கோயில் அமைந்​துள்​ளது.

முண்​டகக்​கண்ணி அம்​மன் கோயி​லின் சார்பு கோயி​லான இத்​தலத்​துக்கு கடந்த 1975-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடை​பெற்​றது. இந்​நிலை​யில், இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் ரூ.20.90 கோடி மதிப்​பீட்​டில் கடந்த ஆண்டு முதல் இக்​கோயி​லில் திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

குறிப்​பாக, திரு​வள்​ளுவர் அவதரித்த திருத்​தலம், வாசுகி கோயில், முப்​பால் மண்​டபம், பொற்​றாமரைக் குளம் ஆகியவை முற்​றி​லும் கருங்​கல் திருப்​பணி​யாக மேற்​கொள்​ளப்​பட்​டது.

ஏகாம்​பரேஸ்​வரர், காமாட்​சி​யம்​மன், நடராஜர், பள்​ளியறை, கரு​மாரி​யம்​மன் சந்நி​தி, பரி​வார தெய்​வங்​களுக்கு தனித்​தனி சந்நி​தி​கள், வாகன மண்​டபம், நூல​கம் போன்​றவை புதி​தாக கட்​டப்​பட்​டன. முப்​பால் மண்​டபத்​தில் திரு​வள்​ளுவரின் 1,330 திருக்​குறள்​களும் சிறப்​பாக வடிவ​மைக்​கப்​பட்​டன.

திருப்​பணி​கள் நிறைவடைந்த நிலை​யில், கும்​பாபிஷேக ஏற்​பாடு​கள் தொடங்​கின. கடந்த 24-ம் தேதி தேவதா அனுக்​ஞை, ஸ்ரீவிக்​னேஸ்வர பூஜை, புண்​யாக​வாசனம், கோ பூஜை, ஷோடச மஹா கணபதி ஹோமம், மகாலட்​சுமி ஹோமம், நவக்​கிரக ஹோமம், பூர்​ணாஹு​தி, தீபா​ராதனை​யுடன் கும்​பாபிஷேக விழா தொடங்​கியது.

தொடர்ந்​து, சூர்யா அக்னி சங்​கிரகணம், யாக​சாலை நியமனம், அங்​குரா அர்ப்பண பூஜை, கும்ப அலங்காரம் ஆகிய​வற்​றைத் தொடர்ந்​து, 1,2,3-ம் கால யாக​சாலை பூஜைகள் நடை​பெற்​றன.

நேற்று காலை 4-ம் கால யாக​ சாலை பூஜை, வேத​பா​ராயணம், மஹா பூர்​ணாஹுதி தீபா​ராதனை நடை​பெற்​றது. 9 மணிக்கு யாத்​திரா தானம், கலச புறப்​பாடு நடை​பெற்​று, அனைத்து விமானங்​களுக்​கும் கும்பாபிஷேகம் செய்​யப்​பட்​டது. திரளான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர்.

அவர்​கள் மீது புனித நீர் தெளிக்​கப்​பட்​டு, பிர​சாதம் வழங்​கப்​பட்​டது. இரவு 7 மணிக்கு திருக்​கல்​யாண உற்​சவம், சுவாமி வீதிஉலா நடை​பெற்​றது. இந்த விழா​வில் மயி​லாப்​பூர் எம்​எல்ஏ வேலு, அறநிலை​யத் துறை ஆணை​யர் பி.என்​.ஸ்ரீதர், துணை ஆணை​யர் சி.நித்​யா, விஜிபி குழு​மத் தலை​வர்​ வி.ஜி.சந்​தோசம்​ உள்​ளிட்​டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in