சபரிமலையில் டிச.27-ல் மண்டல பூஜை!

சபரிமலையில் டிச.27-ல் மண்டல பூஜை!
Updated on
1 min read

பத்தனம்திட்டா: சபரிமலை​யில் டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை காலை 10.10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது. பூஜை முடிந்த பின்​னர் இரவு ஹரிவ​ராசனம் பாடப்​பட்டு கோயில் நடை அடைக்​கப்​படும்.

கேரள மாநிலம் பத்​தனம்​ திட்டா மாவட்​டத்​தில் அமைந்​துள்ள சபரிமலை ஐயப்​பன் கோயில் கடந்த நவம்​பர் 17-ம் தேதி மண்டல பூஜைக்​காக திறக்​கப்​பட்​டது. கார்த்​திகை மாதம் 1-ம் தேதி முதல், 41 நாட்​கள் தொடர்ச்​சி​யாக நடை​பெறும் பூஜை, சபரிமலை​யில் ஒரு மண்டல கால​மாகும்.

மண்டல பூஜையையொட்டி கோயில் திறக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கோயிலுக்கு வருகை தரு​கின்​றனர். பக்தர்களின் வருகை அதிகரித்ததால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தின​மும் கோயி​லில் நெய்​ய பிஷேகம், உஷ பூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்​ச பூஜை ஆகியவை சிறப்​பாக நடை​பெற்று வரு​கின்​றன.

கோயி​லில் ஐயப்​பன் தரிசனத்​துக்​காக தின​மும் ஆன்​லைன் முன்​ப​தி​வில் 70,000 பக்​தர்​களும், ஸ்பாட் புக்​கிங்​கில் 20,000 பக்​தர்​களும் அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். இந்​நிலை​யில் மண்டல காலத்​தையொட்டி சிறப்​புப் பூஜை வரும் 27-ம் தேதி காலை 10.10 முதல் 11.30 மணி வரை நடை​பெறும் என்று கோயில் தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரரு நேற்று தெரி​வித்​தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறிய​தாவது: மண்டல பூஜைக்​காக சபரிமலை ஐயப்​பனுக்கு தங்க அங்கி அணிவிக்​கப்​படும். இந்த தங்க அங்கி ஆரண்​முலா பார்த்​த​சா​ரதி கோயி​லில் இருந்து டிசம்​பர் 23-ம் தேதி புறப்​பட்டு சபரிமலையை டிசம்​பர் 26-ம் தேதி அடை​யும். சபரிமலை​யில் ஐயப்​பனுக்கு தங்க அங்கி அணிவிக்​கப்​பட்ட பின்​னர் 26-ம் தேதி மாலை தீபா​ராதனை நடை​பெறும்.

27-ம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்த பின்​னர் இரவு 11 மணிக்கு ஹரிவ​ராசனம் பாடி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்​கப்​படும். அதன் பின்​னர் டிசம்​பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மகரவிளக்கு பூஜைக்​காக கோயில் திறக்​கப்​படும். இவ்​வாறு கோயில் தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு தெரி​வித்​தார்​.

சபரிமலையில் டிச.27-ல் மண்டல பூஜை!
வாக்காளர் தகவல் திருட்டின் பின்னணியில் பாஜக! - திகில் கிளப்பும் புதுச்சேரி திமுக

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in