வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் விழாவை முன்​னிட்டு 43 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த வேளாங்கண்ணி பேராலயம்.

கிறிஸ்துமஸ் விழாவை முன்​னிட்டு 43 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த வேளாங்கண்ணி பேராலயம்.

Updated on
1 min read

நாகப்பட்டினம்: வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய மாதா பேரால​யத்​தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்​னிட்டு நேற்று நள்​ளிர​வில் இயேசு பிறப்பு நிகழ்ச்​சி​யும், சிறப்பு திருப்​பலி​யும் நடை​பெற்​றது.

நாகை மாவட்​டம் வேளாங்​கண்​ணி​யில் உள்ள புனித ஆரோக்​கிய மாதா பேரால​யத்​தில் ஒவ்​வோர் ஆண்​டும் கிறிஸ்துமஸ் விழா சிறப்​புடன் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. கிறிஸ்துமஸ் பண்​டிகைக்கு முந்​தைய நாள் நள்​ளிர​வில் இயேசு பிறப்பு நிகழ்ச்சி விமரிசை​யாக நடை​பெறும்.

அதன்​படி, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை முன்​னிட்டு விண்​மீன் ஆலய வளாகத்​தில் குடில் அமைக்​கப்​பட்​டது. கிறிஸ்துமஸ் பண்​டிகையை வரவேற்​கும் வகை​யில் பேராலய தியான மண்​டபம் செல்​லும் வழி​யில் மின் விளக்​கு​களால் பந்​தல் அமைக்​கப்​பட்​டிருந்​தது.

பேரால​யத்​தைச் சுற்றி அலங்​கார மின்​விளக்​கு​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. மேலும், பேரால​யத்​தின் முன்பு 43 அடி உயரத்​தில் பிரம்​மாண்ட கிறிஸ்துமஸ் மரம் புனிதம் செய்​யப்​பட்டு திறந்து வைக்​கப்​பட்​டது.

நேற்று இரவு 11.30 மணிக்கு இயேசு பிறப்பு நிகழ்ச்சி விண்​மீன் ஆலயத்​தில் நடந்​தது. சிறப்பு திருப்​பலியைத் தொடர்ந்து குழந்தை இயேசு சொரூபம் வான தேவதைகளால் பவனி​யாக எடுத்​து​வரப்​பட்டு பேராலய அதிபரிடம் வழங்​கப்​பட்​டது.

நள்​ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசு சொரூபத்தை பெற்ற பங்​குத்​தந்தை அற்​புத​ராஜ், அரு​கில் உள்ள குடிலில் வைத்து இயேசு பிறந்​த​தாக அறி​வித்​தார்.

இந்​நிலை​யில், பேராலய அதிபர் இருதய​ராஜ், பொருளாளர் உலக​நாதன், நிர்​வாகத் தந்தை பரிசுத்​த​ராஜ், உதவி பங்​குத் தந்தை ஆரோஜேசு​ராஜ் மற்​றும் நிர்​வாகத் தந்​தையர்​கள், அருள் சகோ​தரி​கள், சகோ​தரர்​கள், சுற்​றுலாப் பயணி​கள் மற்​றும் கிறிஸ்​தவர்​கள் ஆயிரக்​கணக்​கானோர் கலந்து கொண்​டனர்.

தொடர்ந்து இன்று காலை வரை தமிழ், ஆங்​கிலம், மலை​யாளம், தெலுங்​கு, கொங்​கனி ஆகிய மொழிகளில் திருப்​பலி நடை​பெற்​றது. இதில் கலந்து கொள்​வதற்​காக வெளி​மாநிலங்​கள் மற்​றும் வெளி​நாடு​களில் இருந்து ஏராள​மானோர் வேளாங்​கண்ணி வந்​திருந்​தனர். விழாவையொட்டி 200-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர்​.

<div class="paragraphs"><p>கிறிஸ்துமஸ் விழாவை முன்​னிட்டு 43 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த வேளாங்கண்ணி பேராலயம்.</p></div>
இந்தியாவின் பாகுபலி ராக்கெட் மூலம் இஸ்ரோ சாதனை: அதிக எடை செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in