சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேரோட்டம் கோலாகலம்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம்.

Updated on
1 min read

விருத்தாசலம்: சிதம்​பரம் நடராஜர் கோயி​லில் இன்று ஆனி திரு​மஞ்சன தரிசனம் நடை​பெறுகிறது. இதையொட்​டி, திரு​மஞ்சன தேரோட்​டம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது.

சிதம்​பரம் நட​ராஜர் கோயி​லில் ஆனித் திரு​மஞ்சன தரிசன உற்சவ கொடியேற்​றம் ஜூன் 13-ம் தேதி சித்​சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்​தில் ஏற்​றப்​பட்​டு, பஞ்​சமூர்த்தி வீதி உலா நடை​பெற்​றது. தொடர்ந்து 14-ம் தேதி முதல் வெள்ளி சந்​திர பிறை வாக​னத்​தில் சாமி வீதி உலா, தங்க சூரிய பிறை வாக​னத்​தில் சாமி வீதி உலா, வெள்ளி பூத வாக​னத்​தில் சாமி வீதி உலா, வெள்ளி ரிஷப வாக​னத்​தில் சாமி வீதி உலா, வெள்ளி யானை வாக​னத்​தில் சாமி வீதி உலா, தங்க கைலாச வாக​னத்​தில் சாமி வீதி உலா என 20-ம் தேதி வரை தங்​கரதத்​தில் பிச்​சாண்​ட​வர் வீதி உலா​வும் நடை​பெற்​றது.

தொடர்ந்து நேற்று முக்​கிய நிகழ்​வான தேர்த் திரு​விழா நடை​பெற்​றது. மேள​தாளம் முழங்​கிட வேத மந்​திரங்​கள், தேவாரம், திரு​வாசகம் ஓதிட கோயி​லிலிருந்து ஸ்ரீநட​ராஜர், ஸ்ரீ சிவ​காமசுந்​திரி அம்​பாள், விநாயகர், சுப்​ரமணி​யர், சண்​டிகேஸ்​வரர் ஆகிய சுவாமிகள் தனித்​தனி தேர்​களில் எழுந்​தருளினர். இதையடுத்​து, பக்​தர்​கள் தேரின் வடம் பிடித்து இழுந்​தனர். தேருக்கு முன்​னால் சிவனடி​யார்​கள், தேவ விற்​பன்​னர்​கள் வேத மந்​திரங்​கள், தேவாரம், திரு​வாசகம் படியபடியே சென்​றனர்.

தேர் கீழ​வீதி நிலை​யில் இருந்து புறப்​பட்டு கீழ​வீ​தி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி​கள் வழி​யாக மாலை​யில் நிலையை அடைந்​தது. இரவு 8 மணிக்கு ஆயிரங்​கால் முன் முகப்பு மண்​டபத்​தில் ஸ்ரீசிவ​காமசுந்​தரி அம்​மாள் சமேத ஸ்ரீமன் நடராஜ மூர்த்​திக்கு ஏககால லட்​சார்ச்​சனை நடை​பெற்​றது.

இதே​போல் இன்று அதி​காலை 4 முதல் 6 மணி வரை ஸ்ரீசிவ​காமசுந்​தரி அம்​மாள் சமேத ஸ்ரீமன்​நட​ராஜ மூர்த்​திக்கு மகாபிஷேக​மும், தொடர்ந்து சித்​சபை​யில் ரகசிய பூஜை​யும் பஞ்​சமூர்த்தி வீதி உலா​வும் நடை​பெறும். பிற்​பகலில் ஆனித் திரு​மஞ்சன தரிசன​மும், ஞான​காச சித்​சபை பிர​வேச​மும் நடை​பெறும்.

தேர்த்​திரு​விழா மற்​றும் ஆனித் திரு​மஞ்சன விழாவை முன்​னிட்டு சிதம்​பரம் நகருக்​குள் போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. விழாவையொட்டி 500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

<div class="paragraphs"><p>சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம். </p></div>
"வார்த்தைகளில் கவனம் தேவை" - ட்ரம்புக்கு ஈரான் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in