மார்ச் 29-ல் திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம்

கட்டுமான பணி நடைபெற்று வரும் ஆழித்தேர்.

கட்டுமான பணி நடைபெற்று வரும் ஆழித்தேர்.

Updated on
1 min read

திருவாரூர்: ​திரு​வாரூர் தியாக​ராஜர் கோயில் ஆழித் தேரோட்​டம் மார்ச் 29-ம் தேதி நடை​பெற உள்​ளது. விழாவையொட்டி தேர் கட்​டு​மானப் பணி​கள் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

திரு​வாரூர் தியாக​ராஜர் கோயில் சைவ சமயத்​தின் தலைமை​யிட​மாக திகழ்​கிறது. பஞ்​சபூதங்​களில் பூமிக்​குரியதும், பிறந்​தா​லும், பெயர் சொன்​னாலும் முக்தி அளிக்​கிற தலமாக​வும், சர்​வதோஷ பரி​கார தலமாக​வும் விளங்​கு​கிறது. பல்வேறு சிறப்​பு மிக்க இக்​கோயி​லின் ஆழித்​தேர் ஆசி​யா​விலேயே மிகப்​பெரிய தேர் என்ற பெரு​மைமிக்​கது.

இங்கு ஒவ்​வொரு ஆண்​டும் பங்​குனி உத்​திர திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வாக ஆழித்​தேரோட்​ட விழா நடை​பெறும். இதில், பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுப்​பது வழக்​கம். இந்​நிலை​யில், நிகழ் ஆண்​டுக்​கான ஆழித்​தேரோட்​டம் மார்ச் 29-ம் தேதி ஆயில்ய நட்​சத்​திரத்​தில் நடை​பெற உள்​ளது.

இதையடுத்​து, தேர் கட்​டு​மானப் பணி​கள் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கின்​றன. தேர் கட்​டு​மானம், அலங்​கரிப்​ப​தற்​காக 2,200 புதிய மூங்​கில்​கள் கொண்​டு​வரப்​பட்​டு, பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இந்த ஆண்டு தேர் சீலை, தொம்​பைகள், 6 கிரா​திகள், 2 பெரிய துவார பால​கர் சிலை உள்​ளிட்​டவை ரூ.21 லட்​சத்​துக்கு புதி​தாக வாங்​கப்​பட்​டு, அவற்றை தேரில் பொருத்​தும் பணி​கள் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

அலங்​கரிக்​கப்​ப​டாத ஆழித்​தேர் உயரம் மற்​றும் அகலம் 30 அடியாகும். 96 அடி உயரத்​தில் மிகப் பிர​ம்மாண்​டமாக இந்​தத் தேர் கட்​டப்​பட்​டு, தேரை சீராக இயக்க திருச்சி பெல் நிறு​வனம் மூலம் இரும்பு அச்சு மற்​றும் 4 இரும்பு சக்​கரங்​கள் பொருத்​தப்​பட்​டு இயக்கப்படுகிறது.

தேர் செல்​லும்​போது அதை எளி​தாக நிறுத்தும் வகை​யில் ஹைட்​ராலிக் பிரேக் வசதி அமைக்​கப்​பட்​டுள்​ளது. தேரின் முன்​பகு​தி​யில் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்​ளிட்ட பொம்​மை​கள் கட்​டப்​பட்டு அலங்​கரிக்​கப்​படும். இதன்படி தேரின் மொத்த எடை 350 டன் ஆகும்.

தேர் சக்​கரங்​களில் கிரீஸ் வைத்து பராமரிப்பு பணி​கள் நேற்று மேற்​கொள்​ளப்​பட்​டன. தேரோட்​டத்​தை முன்னிட்டு, மார்ச் 28-ம் தேதி இரவு 8 மணிக்குமேல் அஜபா நடனத்​துடன் ஆழித் தேரில் தியாக​ராஜ சுவாமி எழுந்​தருள்​வார்.

அதைத் தொடர்ந்​து, மார்ச் 29-ம் தேதி காலை 5.15 மணிக்கு விநாயகர், சுப்​பிரமணி​யர் தேர் வடம் பிடித்​தல் நிகழ்ச்​சி​யும், 9.05 மணிக்கு ஆழித்​தேர்வடம் பிடிக்​கும் நிகழ்ச்​சி​யும் அதைத்​ தொடர்ந்​து, சண்​டிகேஸ்​வரர், அம்​மன் தேர் வடம் பிடிக்​கும் நிகழ்வும் நடைபெறும்.

ஆழித்​தேரோட்ட விழா​வில் திரு​வாரூர் மாவட்​டம் மட்​டுமன்​றி, தமிழகம் முழு​வ​திலிருந்​தும் பல்​லா​யிரக்​கணக்கான பக்​தர்​கள் பங்​கேற்​பார்​கள் என்​பதால், பக்​தர்களுக்கு தேவை​யான வசதி​களை செய்துதர விரி​வான ஏற்​பாடுகளை மாவட்ட நிர்​வாக​மும், கோயில் நிர்​வாக​மும் இணைந்து செய்து வருகின்​றன.

<div class="paragraphs"><p>கட்டுமான பணி நடைபெற்று வரும் ஆழித்தேர்.</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 26 மார்ச் 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in