

திருவண்ணாமலை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள், துர்க்கை அம்மன் கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.
அவ்வாறு, பங்குனி மாத பவுர்ணமியையொட்டி பெறப்பட்ட காணிக்கையை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் குமரேசன் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணியில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். காணிக்கை எண்ணும் பணி வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதில் ரூ.2 கோடியே 7 லட்சத்து 6 ஆயிரத்து 201 ரொக்கம், 195 கிராம் தங்கம், 1,205 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.