தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 27 கருட சேவை உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற 27 கருட சேவை நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்டத்துக்கு நடுவே எழுந்தருளிய 27 பெருமாள் சுவாமிகள். படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற 27 கருட சேவை நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்டத்துக்கு நடுவே எழுந்தருளிய 27 பெருமாள் சுவாமிகள். படம்: ஆர்.வெங்கடேஷ்

Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்​சாவூர் மாநகரில் உள்ள 27 வைணவ கோயில்​களின் கருட சேவை நேற்று ஒரே இடத்​தில் நடை​பெற்​றது.

ஆண்​டு​தோறும் வைகாசி மாத திரு​வோண நட்​சத்​திரத்​தில் தஞ்​சாவூரில் 27 பெரு​மாள் கோயில்​களின் உற்சவ பெரு​மாள் சுவாமிகள், கருட வாக​னத்​தில் புறப்​பட்​டு, ஒரே இடத்​தில் பக்​தர்​களுக்கு அருள்​பாலிப்​பது வழக்​கம். இதன்​படி, நிகழாண்டு கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

இதையொட்​டி, தஞ்சாவூர் நீலமேகப் பெரு​மாள், மணி​குன்றா பெரு​மாள், மேல சிங்​கப்பெரு​மாள், வேளூர் வரத​ராஜர், கல்​யாண வெங்​கடேச பெரு​மாள், கலி​யுக வெங்​கடேச பெரு​மாள், வரத​ராஜ பெரு​மாள், நவநீதகிருஷ்ணன், மேல​வாசல் ரங்​க​நாதர், விஜய ராமர், கோவிந்​த​ராஜ பெரு​மாள், ஜனார்த்தன பெரு​மாள், பிரசன்ன வெங்​கடேச பெரு​மாள், கீழ கோதண்​ட​ராமர், கீழ சிங்​கப் பெரு​மாள், பூலோக கிருஷ்ணர், படித்​துறை வெங்​கடேசப் பெரு​மாள், பஜார் ராமர் ஆகிய 27 கோயில்​களில் இருந்து கருட வாக​னத்​தில் சிறப்பு அலங்​காரத்​தில் பெரு​மாள் புறப்​பட்​டு, கீழ​வாசல் போலீஸ் ஸ்டேஷன் ரோடு, கொண்​டி​ராஜ​பாளை​யம் வழி​யாகச் சென்றுகீழ ராஜவீ​தி​யில் வரிசை​யாக எழுந்தருளினர். அப்​போது, ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பெரு​மாள் சுவாமிகளை வழிபட்​டனர்.

இதைத்​தொடர்ந்து வீதியுலா சென்​று, மீண்​டும் அந்தந்த கோயில்​களை சுவாமிகள் சென்​றடைந்​தனர். இன்று நவநீத சேவை நிகழ்ச்​சி​யும், விடை​யாற்றி விழா​வும் நடை​பெறவுள்​ளன. இதற்​கான ஏற்​பாடு​களை தஞ்​சாவூர் ராமானுஜ தர்சன சபா மற்​றும் அந்​தந்த கோயில் நிர்​வாகத்​தினர் செய்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற 27 கருட சேவை நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்டத்துக்கு நடுவே எழுந்தருளிய 27 பெருமாள் சுவாமிகள். படம்: ஆர்.வெங்கடேஷ்</p></div>
ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் தாமதம் ஏன்? - ட்ரம்ப் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in