சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்ட ஒரு மாதத்தில் 26 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசிப்பதற்காக நேற்று காத்திருந்த பக்தர்களில் ஒரு பகுதியினர்.

சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசிப்பதற்காக நேற்று காத்திருந்த பக்தர்களில் ஒரு பகுதியினர்.

Updated on
1 min read

குமுளி: சபரிமலை​யில் மண்டல வழி​பாட்​டுக்​காக கோயில் நடை திறக்​கப்​பட்ட ஒரு மாதத்​தில் 26 லட்​சம் பக்​தர்​கள் வரு​கைபுரிந்து சுவாமி தரிசனம் செய்​துள்​ளனர். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்டல வழி​பாட்​டுக்​காக நவ. 16-ம் தேதி மாலை நடை திறக்​கப்​பட்​டது.

டிச. 16-ம் தேதி​யுடன் ஒரு மாதம் நிறைவடைந்த நிலை​யில் தரிசனம் செய்த பக்​தர்​களின் எண்​ணிக்கை விவரங்​களை திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, டிச. 16-ம் தேதி இரவு 8 மணி நில​வரப்​படி 26 லட்​சத்து 81 ஆயிரத்து 460 பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​துள்​ளனர்.

பல்​வேறு வனப்​பாதை வழியே வந்த பக்​தர்​களின் எண்​ணிக்கை இந்த ஆண்டு உயர்ந்​துள்​ளது. அழுதக்​கட​வு-பம்பை வழியே 46,690 பக்​தர்​களும், சத்​திரம்​-சந்​நி​தானம் வனப்​பாதை வழியே 74,473 பேரும் வந்​துள்​ளனர்.

இதே​போல, பம்​பை​யில் இருந்து 25 லட்​சத்து 60 ஆயிரத்து 297 பேர் சபரிமலை சென்​றுள்​ளனர். அதி​கபட்​ச​மாக கடந்த 8-ம் தேதி மட்​டும் ஒரு லட்​சத்து ஆயிரத்து 844 பக்​தர்​கள் தரிசனம் செய்துள்​ளனர்.

வனப்​பாதை வழியாக சபரி: மலைக்கு வரும் ஐயப்ப பக்​தர்​களின் பாது​காப்​புக்​காக பல்​வேறு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசிப்பதற்காக நேற்று காத்திருந்த பக்தர்களில் ஒரு பகுதியினர்.</p></div>
பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழப்பு: அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in