கிறிஸ்துவின் கால் தடங்கள்

கிறிஸ்துவின் கால் தடங்கள்
Updated on
1 min read

எருசலேம்

எருசலேம் சமாதானத்தின் நகரம் ஆகும். இதற்கு எட்டு வாயில்கள் உள்ளன. பொன்வாயில் வழியாகத் தான் இயேசு எருசலேமிற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் யூதர்கள் அந்த வாயில் வழியாகவே மீட்பர் வருவார் என்று கூறுகின்றனர்.

பெத்லகேம்

இங்குதான் யேசுவும் தாவீதும் பிறந்தனர். இராக்கேலின் கல்லறை இங்கே உள்ளது. எருசலேமிற்குத் தெற்கே ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் சூசையப்பனின் தந்தையின் இல்லம் உள்ளது. இங்கிருந்துதான் புனித ஜெரோம் விவிலியத்தை எழுதினார். இவர் தங்கியிருந்த குகை ஒன்றும் உள்ளது.

நாசரேத்

கலிலேய நகரங்களில் பழமை வாய்ந்த ஊர். அன்னை மரியாளிடம் கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை அறிவித்த இடத்தில் இன்று ஆலயமும் அதனுடன் சூசையப்பரின் ஆலயமும் உள்ளது. உலகிலேயே கபிரியேல் வானதூதருக்கு இங்கு மட்டும்தான் ஆலயம் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in