Last Updated : 11 Jun, 2019 02:08 PM

 

Published : 11 Jun 2019 02:08 PM
Last Updated : 11 Jun 2019 02:08 PM

துளசிமாடம் இருந்தால் மகாலக்ஷ்மி வருவார்

வீட்டில் துளசி மாடம் இருந்தால், அங்கே மகாலக்ஷ்மியும் குபேரனும் குடியிருப்பார்கள். ஐஸ்வர்ய கடாக்ஷம் வீட்டில் தங்கும். வீட்டின் தரித்திரம் அனைத்தும் விலகிவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மகாலக்ஷ்மி நம் வீட்டுக்கு வாசம் செய்யவேண்டும்தானே. நம் வீட்டில் நிரந்தரமாகக் குடியிருக்க வேண்டும் அல்லவா.

இதற்கு சில காரணங்களைச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

எந்த வீட்டில், பெண்கள் கெளரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் அழுகைச் சத்தம் இல்லாமல் இருக்கிறதோ, எந்த வீட்டில் பெண்களின் சிரிப்பொலி கேட்கப்படுகிறதோ அங்கே... எதுவும் செய்யாமலேயே, எந்தப் பூஜையும் இல்லாமலேயே மகாலக்ஷ்மி குடிபுகுவாள். நிரந்தரமாக வாசம் செய்து, குடும்பத்தில் சகல சம்பத்துகளையும் வழங்கிக் கொண்டே இருப்பாள் என்பது ஐதீகம்.

ஆனாலும், இவையெல்லாம் இருந்தால், இவையெல்லாம் செய்தால், மகாலக்ஷ்மியும் குபேரனும் வீட்டில் வாசம் செய்வார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

துளசிமாடம் :

வீட்டில் துளசி மாடம் வைத்திருக்கிறீர்களா? இல்லையெனில் முதலில் துளசிமாடம் வையுங்கள். தினமும் துளசிமாடத்துக்கு திலகமிட்டு, விளக்கேற்றி, மூன்று முறை துளசிமாடத்தை வலம் வந்து வேண்டிக்கொள்ளுங்கள்.

இப்படியாக, தினமும் வழிபட்டு வந்தால், துளசிமாடத்தில் முதலில் மகாலக்ஷ்மி குடிபுகுவாள். பின்னர், நம் வழிபாட்டில் மகிழ்ந்து வீட்டுக்குள்ளேயே வந்துவிடுவாள்.

மகாலக்ஷ்மி வந்துவிட்டால், குபேரரும் வந்துவிடுவார். குபேர யோகமும் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். இதன் பிறகு, வீட்டுக்கு குபேர யோகத்தை வாரி வழங்கி அருள்வார் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x