Published : 26 Apr 2025 12:28 AM
Last Updated : 26 Apr 2025 12:28 AM

காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நியமனம்: ஏப். 30-ம் தேதி சந்நியாஸ்ரம தீட்சை பெறுகிறார்

ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்வதி சுவாமிகளுடன் ஸ்ரீ கணேச சர்​மா​ தி​ரா​விட்.

சென்னை / காஞ்சிபுரம்: ​காஞ்சி காமகோடி பீடத்​தின் 71-வது பீடா​திப​தி​யாக ரிக் வேத​விற்​பன்​னர் ஸ்ரீ கணேச சர்​மா​ தி​ரா​விட் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். அட்சய திரு​தியை தினத்​தில்​(ஏப்​.30-ம் தேதி), அவர் சந்​நி​யாஸ்ரம தீட்சை பெற உள்​ளார் என்று காஞ்சி சங்கர மடத்​தின் ஸ்ரீ கார்​யம் சல்லா விஸ்​வ​நாத சாஸ்​திரி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக காஞ்சி சங்கர மடம் சார்​பில் அவர் வெளி​யிட்ட அறிக்​கை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்​தின் 70-வது பீடா​திபதி ஜகத்​குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், புனித அட்சய திரு​தியை தினத்​தில் (ஏப்​.30-ம் தேதி, புதன்​கிழமை) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்​ரமண்ய கணேச சர்மா திரா​விட்​டுக்​கு, காஞ்சி காமாட்சி அம்​மன் கோயி​லில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்​தத்​தில் காலை 6 மணி முதல் 9 மணிக்​குள் சந்​நி​யாஸ்ரம தீட்சை அருள உள்ளார்.

ஸ்ரீ ஆதிசங்​கரர் ஜெயந்தி: இந்த புனித நிகழ்ச்சி கிமு 482-ல் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறு​விய ஸ்ரீ ஆதிசங்​கரரின் 2,534-வது ஜெயந்தி மஹோத்​ஸவத்தை (மே.2-ம் தேதி) ஒட்டி நடை​பெறு​வது குறிப்​பிடத்​தக்​கது.

ஆந்​திர பிரதேச மாநிலம் துனி என்ற ஊரில், பிரம்மஸ்ரீ துட்டு ஸ்ரீ நி​வாச சூர்ய சுப்​பிரமணிய தன்​வந்​தரி - அலிவேலு மங்​காதேவி தம்​ப​திக்கு 2001-ம் ஆண்​டு, ஸ்ரீ கணேச சர்மா திரா​விட் மகனாகப் பிறந்​தார். பிரம்மஸ்ரீ துட்டு ஸ்ரீ நி​வாச சூர்ய சுப்​பிரமணிய தன்​வந்​தரி, அன்​னாவரம் ஸ்ரீ வீர வெங்கட சத்​ய​நா​ராயண சுவாமி கோயி​லில் விராட புரோகித​ராக பணிபுரிந்து வரு​கிறார்.

தெலங்​கானா மாநிலம் நிஜா​மா​பாத்​தில் நிர்​மல் மாவட்​டம், பசா​ரா​வில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்​வ​தி தேவஸ்​தானத்​தில், கர்​நாட​காவைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ சந்​துகுட்லு ஹோசமனே ரத்​னாகர பட் சர்​மா​விடம் (ரிக்​வேத சலக் ஷண கனபாடிகள்) ரிக்​வேதம் பயின்ற ஸ்ரீ கணேச சர்மா திரா​விட், அங்​கேயே வேதம் பயிற்​று​வித்து வந்​துள்​ளார். 2006-ம் ஆண்டு வேத கல்​வியைத் தொடங்​கிய காலத்​தில் இருந்​தே, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்​தின் பூஜ்ய ஸ்ரீ சங்​க​ராச்​சா​ரி​யார் சுவாமிகளின் கவனத்தை ஈர்த்​துள்​ளார். ரிக் வேதம் தவிர யஜூர்​வேதம், சாமவேதம், சதாங்​கம், தஷோபநிஷத் படிப்​பு​களை முடித்த, ஸ்ரீ கணேச சர்மா திரா​விட், தற்​போது சாஸ்​திரக் கல்​வியை தொடர்​கிறார். இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பூர்​வீக​ம் வலங்கைமான்: தமிழகத்​தில், ஆழ்ந்த வைதீக குடும்​பத்​தில் பிறந்​து,ஆந்​திர​மாநிலத்​துக்கு குடி பெயர்ந்​தவர்​கள், தங்​கள் பெயருக்​குப் பின்​னால் திரா​விட் என்ற பெயரை சேர்த்​துக் கொள்​வதுண்​டு. ஸ்ரீ கணேச சர்மா தி​ரா​விட்​டின் குடும்​பம், கும்​பகோணம் அருகே உள்ள வலங்​கை​மானை பூர்​வீக​மாகக்​ கொண்​டது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x