Published : 26 Feb 2024 04:06 AM
Last Updated : 26 Feb 2024 04:06 AM

கூடலழகர் கோயிலில் தீர்த்தவாரி பூஜை

மதுரை: மதுரை கூடலழகர் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா பிப்.14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப்.23-ம் தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழாவையொட்டி, மாலை 6 மணியளவில் தங்கச்சிவிகையில் பெருமாள் புறப்பாடும், அன்றிரவு 8.45 மணியளவில் உபய நாச்சியாருடன் தெப்பத்தை சுற்றி வரும் நிகழ்வும் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 12-ம் நாளான ( பிப்.25 ) நேற்று ஹேமபுஷ்கரணியில் தீர்த்த வாரி பூஜையுடன் திருவிழா நிறைவு பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x