Published : 15 Feb 2024 06:25 AM
Last Updated : 15 Feb 2024 06:25 AM

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது: ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது. இதையொட்டி சென்னை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியின்போது சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, கிறிஸ்தவர்களின் நெற்றியில் சிலுவை அடையாளத்துடன் சாம்பலை பூசினார். படம்: ம.பிரபு

சென்னை: மார்ச் மாதம் 31-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளநிலையில், சாம்பல் புதனான நேற்று கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை தொடங்கி உள்ளனர். சிலுவையில் அறையப்பட்ட இயேசு 3-ம் நாள் உயிர்த்தெழும் நாளை ஈஸ்டர் பண்டிகையாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறோம். இது உயிர்ப்பு பெருவிழாவாகவும், உயிர்த்தெழுந்த நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இயேசு கிறிஸ்துவின் பாடுகளைதியானிக்கும் வகையில் ஆண்டுதோறும் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக அனுசரிப்பார்கள். இவ்வாண்டுக்கான தவக்காலம் நேற்று தொடங்கியது.

இதையொட்டி, சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் ஆலயங்களில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். வழிபாடு நிறைவு பெற்றதும், ஆலயத்துக்கு வந்திருந்த மக்களுக்கு பாதிரியார்கள் நெற்றியில் சாம்பல் மூலம்சிலுவை அடையாளமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தேவாலயங்களிலும் வழிபாடுகளும், அதிலும் குறிப்பாக இந்த 40 நாட்களுக்கு இடைப்பட்ட ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாலையில் சிறப்பு வழிபாடு களும், பிரார்த்தனைகளும் நடத்தப்படும்.

40 நாட்கள் தவக்காலத்தைதொடர்ந்து குருத்தோலை ஞாயிறும், அதன்பின்னர், இயேசுவைசிலுவையில் அறையும் நிகழ்வாகவும், சிலுவைப்பாடுகளின்போது அவர் முன்மொழிந்தவார்த்தைகள் குறித்து தியானிக்கவும் புனிதவெள்ளி அனுச­­ரிக்கப்படுகிறது.

அதன்படி, மார்ச் 29-ம் தேதி புனிதவெள்ளி அனுசரிக்கப்பட உள்ளது.அன்றைய நாளில் இருந்து 3-வதுநாள், 31-ந்தேதி (ஞாயிறு) இயேசுகிறிஸ்து உயிர்ந்தெழுந்த உயிர்ப்பு பெருவிழா மற்றும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x