

ஆர்யாவின் நடிப்பில் உருவான ‘அனந்தன் காடு’ படம் செப்டம்பர் 2-ம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்யா, இந்திரன்ஸ், சுனில், நிகிலா விமல், ரெஜினா, போஸ் வெங்கட், அஞ்சலி நாயர் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘அனந்தன் காடு’.
ஜூன் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், செப்டம்பர் 2-ம் தேதி மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தத் தகவலை மனோரமா மேக்ஸ் அதன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மினி ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் தயாரித்துள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் தமிழ், மலையாள மொழிகளில் உருவாகியுள்ளது. ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இப்படத்துக்கு அஜனீஸ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தைப் பற்றி ஆர்யா கூறும்போது, ‘‘அரசியல் பின்னணியில் உள்ள ஆக் ஷன் கதை இது. ஆனால், அரசியல் கதை இல்லை. திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டு, கேரளா - தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் நடைபெறும் கதை. எனவே படத்தில் தமிழ், மலையாள மொழிகள் இயல்பாக இடம்பெறும்.” என்று தெரிவித்திருந்தார்.