

நடிகர் சிம்பு நடிப்பில் உருவான ‘பத்து தல’ படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நெடுஞ்சாலை’, ‘சில்லுனு ஒரு காதல்’, படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஓபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த மார்ச் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பத்து தல’. கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டிஜே, அனுசித்ரா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
மணல் மாஃபியா டான் ஒருவரை மையப்படுத்தி உருவான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.55 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.