நல்ல திருப்பம்

நல்ல திருப்பம்
Updated on
1 min read

வாஸந்தி தனது கருத்தை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய கருத்தில் இறைவனின் பெயரில் கிராதகத்தைச் செய்யும் மனங்களில் இறைவன் எப்படி இருக்க முடியும் என்ற கருத்து எதிர்காலத்தில் தவற நேரும் மனங்களில் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்லாமல், ஆஸ்கார் வைல்டு பாணியில் மக்களைச் சிரிக்க வைக்க முற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த மூர்க்கர்களை இனியும் இஸ்லாமியர் என்று தவறியும் குறிப்பிட்டுவிடாதீர்கள் என்றும் தனது வாதத்தைத் தெளிவுபட எடுத்து வைத்துள்ளார்.

- இரவி ராமானுஜம், திருக்குறுங்குடி.எழுத்தாளர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in