

தமிழ்நாட்டில் 2026-27 முதல் 2036-37க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் மின்சாரத் தேவை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று மத்திய மின்சார ஆணையம் (சிஇஏ) கணித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரித்துவரும் சூழலில், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொலைநோக்குத் திட்டங்களில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இந்தக் கணிப்பு உணர்த்துகிறது.
இந்தியாவில் 2026-27 முதல் 2035-36 வரையிலான தேசிய மின் உற்பத்திக்கு ஏற்ற அளவு சார்ந்த (National Generation Adequacy Plan) திட்ட அறிக்கையை சிஇஏ வெளியிட்டுள்ளது. இதில் 2035-36இல் இந்தியாவின் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன் 1.121 ஜிகாவாட்டாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.