Published : 01 Feb 2023 06:45 AM
Last Updated : 01 Feb 2023 06:45 AM

ப்ரீமியம்
நிதிநிலை அறிக்கை: நிறைவேறட்டும் எதிர்பார்ப்புகள்

ஒவ்வோர் ஆண்டும் ஒட்டுமொத்தத் தேசமும் எதிர்பார்த்துக் காத்திருப்பது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் தருணத்துக்காகத்தான். 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்யவிருக்கும் நிலையில், சாமானியர்கள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை பல்வேறு தரப்பினரின் கவனமும் அதன் மீது குவிந்திருக்கிறது.

2024 இல் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த ஆண்டில் இடைக்கால நிதிநிலை அறிக்கைதான் தாக்கல்செய்யப்படும். ஆக, இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழுமையான இறுதி நிதிநிலை அறிக்கை. இந்த ஆண்டு 9 மாநில சட்டமன்றத் தேர்தல்கள், அடுத்த ஆண்டில் மக்களவைத் தேர்தல் என அரசியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம் என்பதால், ஜனமயக்குத் திட்டங்கள் இடம்பெறலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்து இந்தியச் சமூகம் இன்னமும் முழுமையாக வெளிவந்துவிடவில்லை. கூடவே, சர்வதேச அளவிலான பொருளாதார மந்தநிலையும் கணக்கில் கொள்ளப்பட வேண்டியதாகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x