

அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் போன்றவை பொது இடங்களில் அனுமதியின்றிக் கொடிக் கம்பங்களை அமைப்பது தொடர்கதையாகிவரும் நிலையில், இது தொடர்பாக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளும் முழுமையாகப் பின்பற்றப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்குச் சொந்தமான இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜனவரி 28இல் உத்தரவிட்டது.