

கன்னியாகுமரி அருகே மூன்று இடங்களில் எண்ணெய், இயற்கை எரிவாயு ஆய்வு மேற்கொள்வதற்கான ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலியம் - இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டிருப்பதற்கு, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டத்தைக் கைவிடும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதமே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ஏல அறிவிப்பு, அந்தப் பகுதி மீனவர்கள் குறித்தும் சூழல் பாதிப்பு குறித்தும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.