

பஞ்சாப் தேசிய வங்கியில் பெருமளவில் கடன் மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற வைர வணிகர் மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டிருப்பது, அவரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் கட்டமாக அமையுமா என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
பிரபல வைர வணிகரான நீரவ் மோடியும் அவரது தாய்மாமன் மெகுல் சோக்சியும், 2011 – 2017 காலக்கட்டத்தில் மிகப் பெரிய வங்கி மோசடியில் ஈடுபட்டவர்கள். நீரவ் மோடியின் நிறுவனமும், மெகுல் சோக்சியின் நிறுவனமும் மும்பையில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கிக் கிளையில் ஈடு ஏதும் தராமல் கடன் பெற்று வணிகம் செய்து வந்தனர்.