

இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு அதிகரித்திருப்பதும் புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றல் ஆதாரத்தைப் பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிப்பதும் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன. காலநிலை மாற்றத்தால் புவி வெப்பமடைவது அதிகரித்து, உலகம் முழுவதும் பல்வேறு இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இந்த முன்னகர்வு, சுற்றுச்சூழல் மீதான இந்தியாவின் அக்கறையைப் பறைசாற்றுகிறது.
காலநிலை மாற்றத்துக்கான முக்கியக் காரணியாகப் புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாடு இருப்பதால், அவற்றுக்குப் பதிலாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களைப் பயன்படுத்தும் திட்டம் காலநிலை உச்சி மாநாடுகளில் பரிந்துரைக்கப்பட்டது.