Published : 22 Aug 2023 06:20 AM
Last Updated : 22 Aug 2023 06:20 AM

ப்ரீமியம்
கிக் தொழில் துறையினரின் எதிர்காலம் உறுதிப்பட வேண்டும்

ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விகி தொழிலாளர்களுக்குத் தனி நல வாரியம் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. கிக் பொருளாதாரம் என்று அழைக்கப்படும் இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு, விபத்துக் காப்புறுதி, சுகாதாரக் காப்புறுதி போன்றவை இல்லை.

இவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களைக் கண்காணிக்கவும் முறைப்படுத்தவும் அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தொழிலாளர் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். எரிபொருள் விலை அதிகரித்திருக்கும் நிலையிலும், தங்களுக்கு உரிய முகவர் கட்டணம் அதிகரிக்கப்படுவதில்லை, தினசரி இலக்குகள் எட்டப்படாவிட்டால் ஊக்கத்தொகை உள்படத் தங்களுக்கு வழங்கப்படும் பிற பலன்கள் குறைக்கப்பட்டுவிடுகின்றன என்று இத்தொழிலாளர்கள் தொடர்ந்து முறையிட்டுவருகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x