

நிரந்தர ஆசிரியர் பணி கிடைப்பதே இன்று குதிரைக்கொம்பாகிவிட்டது. எனினும், இளம் ஆசிரியர்களில் பலர் வேலையை உதறிவிட்டு வேலையில்லாத் திண்டாட்டத்துக்குள்ளும் நிச்சயமற்ற வாழ்க்கைச் சூழலுக்குள்ளும் நுழைய முற்படுகின்றனர். பள்ளிக்கூடங்களில் பரவும் அமைதியின்மை வெளி உலகத்துக்குத் தெரிவதில்லை.
அதிகரிக்கும் நெருக்கடி: இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே இந்தப் போக்கு பல நாடுகளில் தலைதூக்குவதை யுனெஸ்கோ கவனப்படுத்தியது. யுனெஸ்கோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஆய்விதழான ‘பிராஸ்பெக்ட்டஸ்’இல் ‘அத்தனை ஆசிரியர்களும் எங்கே போனார்கள்?’ என்னும் கட்டுரை வெளிவந்தது.