பேரவைத் தேர்தல் 2026 | சுற்றுச்சூழல் பாதுகாப்பு: தமிழகத்தின் பங்கு என்ன?

பேரவைத் தேர்தல் 2026 | சுற்றுச்சூழல் பாதுகாப்பு: தமிழகத்தின் பங்கு என்ன?
Updated on
3 min read

பூவுலகின் நீடித்த தன்மையைப் பேணுவதற்கான கோளியக்க வரம்புகளை (planetary boundaries) ஒன்பதாகச் சுற்றுச்சூழல் அறிஞர்கள் வரையறுக்கின்றனர். இதில் ஆறு முதல் ஏழு வரம்புகளை நாம் மீறிவிட்டோம்.

மீதமுள்ளவற்றையும் விரைவில் மீற உள்ளோம் என்பதை நமது செயல்பாடுகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. மீறினால் அவற்றை மீண்டும் சீரமைக்க முடியாது. ஒட்டுமொத்தமாக உலகின் நிலை இதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் நிலைமையும் கவலைக்குரியதாகவே உள்ளது.

நீர்வளம்

கடந்த 50 ஆண்டு​களில் மழைப்​பொழிவு அளவு சராசரி 950 மி.மீ. என்பது மாறாமல் இருந்​தா​லும், மழை பொழியும் நாள்களின் எண்ணிக்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்​டுள்ளது. அதாவது 1970-80​களில் ஆண்டுக்கு 60 நாள்களில் மழை பரவலாகப் பெய்து​வந்தது. கடந்த 2015-2025 வரை ஆண்டுக்கு 40 நாள்களில் கொட்டித் தீர்த்து​விடு​கிறது. இதனால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுக் கடுமையான சேதாரம் ஏற்படு​கிறது.

தமிழகத்தின் நீர்வரத்தை எதிர்​கொள்ளப் பல ஏரிகளும் குளங்​களும் அமைக்​கப்​பட்​டிருந்தன. அதைப் பண்டைய மக்கள் மிகக் கவனமாகப் பாதுகாத்து​வந்​தனர். அது இப்போது முற்றிலும் கைவிடப்​பட்டு அரசின் கைகளுக்கு மாற்றப்​பட்​டுள்ளது. அதனால் பங்கேற்பு இல்லாத நீர் மேலாண்​மையில் முறைகேடு​களும் குளறு​படிகளும் மேலோங்கி உள்ளன.

தமிழகத்தில் மழைநீரைச் சேமிக்​கக்​கூடிய வாய்ப்புள்ள கட்டிடங்கள் 2 லட்சத்​துக்கும் அதிகமாக உள்ளதாக அரசு தெரிவிக்​கிறது. இதில் அரசுக் கட்டிடங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டவை அடங்கும். குடிநீருக்காக ஆண்டுக்கு ரூ.10,000 கோடி முதல் ரூ.18,000 கோடிவரை அரசு செலவிடு​கிறது. வீட்டுக்கு வீடு குடிநீர் புதைதொட்​டிகள் (sump) அமைக்க அரசு நிதி உதவியளித்தால் ஐந்து ஆண்டு​களில் குடிநீர் வழங்கலை முற்றிலும் மக்கள்​மய​மாக்​கிவிட முடியும்.

ஆற்று மணலைக் கொள்ளை​யடிப்பது, ஆற்றில் கழிவுநீரைக் கலப்பது, கசடுகளைக் குவிப்பது போன்ற செயல்கள் தொடர்​கின்றன. இதைத் தடுக்க அரசு, நீதிமன்​றங்கள், மக்கள் என்கிற முக்கூட்டு நடவடிக்கை அவசியம். கழிவுநீரைத் தூய்மை​யாக்கும் வடிப்பான் வசதிகளைச் செய்து நீரைத் தூய்மை​யாக்கிய பின்னரே வெளியேற்ற வேண்டும். பொதுவெளியில் கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்​சாலைகளை​யும் வீடுகளையும் உடனடி​யாகத் தடுத்துத் தண்டிக்க வேண்டும்.

குறிஞ்சி நலம்

தமிழ்​நாட்டின் மலை வளமே அனைத்து மக்களுக்கும் உயிரா​தாரம். மலைப் பகுதி​களில் சட்டபூர்வ, சட்டத்​துக்குப் புறம்பாக மலையைச் சுரண்டும் சுரங்​கங்கள் (quarries) அமைக்​கப்​பட்​டிருக்​கின்றன. இவை பாறைகளை உடைத்து மலைகளைக் கரைக்​கின்றன. நீதிமன்​றங்கள் கண்டித்​தா​லும், இன்னும் பல குவாரி​களுக்கு அரசு அனுமதி வழங்கிக்​கொண்​டுதான் இருக்​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in