முன்தோன்றி மூத்த வாள் | உயிருக்கு நேர் - 5

முன்தோன்றி மூத்த வாள் | உயிருக்கு நேர் - 5
Updated on
2 min read

கிரேக்கப் பாவலன் ஈசீயோத் (Hesiod–பொ.ஆ.மு.700), வாரிசுரிமையாக வந்த குடும்பச் சொத்தைத் தம்பி பெர்சிஸ் (Perses) என்பவனோடு மிகச்சரியாகப் பங்கிட்டுக்கொண்டான். மொத்தச் சொத்துக்கும் ஆசைப்பட்ட தம்பி பெர்சிஸ், சொத்து சரியாகப் பிரிக்கப்படவில்லை என்று வழக்கிட்டு, நடுவர்களுக்குக் கையூட்டிக் கூடுதல் சொத்தை அடைந்துகொண்டான்.

அதன் மறுவினையாக ஈசீயோத், ‘உழைப்பும் ஊழிகளும்’ (Works and Days) என்றொரு நெடும்​பாட்டு எழுதி​னான். தம்பிக்கு அண்ணன் எழுதிய அப்பாட்டில் ஊழிகள் ஐந்தாகப் பிரிக்​கப்​படு​கின்றன: பொற்காலம், வெள்ளிக்​காலம், வெண்கலக்​காலம், வீரக்​காலம், இரும்​புக்​காலம். கல்வி, அஞ்சாமை, புகழ், கொடை ஆகிய நான்கினால் மனிதர்​களுக்குப் பெருமிதம் வரும் என்கிறார் தொல்காப்​பியர் (தொல்​,/பொருள்​,/மெய்ப்​பாட்​டியல்-9).

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in