சூழலைக் காக்க ஒலித்த ஒற்றைக் குரல்! | அஞ்சலி: மாதவ் காட்கில் (1942 - 2026)

சூழலைக் காக்க ஒலித்த ஒற்றைக் குரல்! | அஞ்சலி:    மாதவ் காட்கில் (1942 - 2026)
Updated on
3 min read

புகழ்பெற்ற சூழலியல் அறிஞரான மாதவ் காட்கில் ஜனவரி 7ஆம் தேதி தன்னுடைய 82ஆவது வயதில் காலமானார். பல சுற்றுச்சூழல் நூல்களை எழுதியிருக்கும் மாதவ் காட்கில், மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாவலர் எனப் போற்றப்படுபவர். ஹார்வர்டு பல்கலைக்கழகம், பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகவும், ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்.

பத்ம பூஷண், பத்ம விபூஷண், ஐ.நா.வின் ‘சாம்பியன் ஆஃப் எர்த்’ போன்ற பல விருதுகளைப் பெற்றவர். இவை அனைத்தையும் காட்டிலும், ஒரு சூழலியல் செயல்பாட்டாளரைப் போலவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களின் பங்களிப்பை வலியுறுத்திய கல்வியாளர் என்பது அவருடைய தனிச்சிறப்பு.

அறிக்கையும் எதிர்​வினையும்: மேற்குத் தொடர்ச்சி மலையின்மீது படர்ந்துள்ள மரங்கள் அம்மலையைப் பற்றி​யிருப்​ப​தைவிட இறுக்​கமாக, நம் அரசாங்​கங்​களும் மலையை மூலதன​மாகக் கொண்டு பிழைப்பு நடத்தும் நிறுவனங்​களும் அதைப் பற்றி​யிருக்​கின்றன. இந்த இரும்​புப்​பிடியைக் கைவிட அவர்களுக்குச் சற்றும் விருப்பம் கிடையாது.

ஆகவேதான், கடந்த 2011இல் மாதவ் காட்கில் தலைமையிலான மேற்குத் தொடர்ச்சி மலைச் சுற்றுச்​சூழல் வல்லுநர் குழுவின் அறிக்கை வெளியான​போது, அது அவர்களுக்கு அதிர்ச்சி​யூட்​டியது. அந்த அறிக்கையில் அப்படி என்னதான் இருந்தது? மேற்குத் தொடர்ச்சி மலையில் வளர்ச்சியின் பெயரால் நிகழும் அழிவுகள் பற்றி அது எச்சரித்​ததோடு நில்லாது, அதற்கான தீர்வு​களையும் முன்வைத்​திருந்தது.

அந்த அறிக்கை நிறைவுசெய்​யப்​பட்டு அரசிடம் ஒப்படைக்​கப்பட்ட பிறகும், அதை உரிய காலத்தில் வெளியி​டாது, சுற்றுச்​சூழல்​-வனத் துறை அமைச்சகம் காலதாமதம் செய்தது. பின்னர் வழக்குத் தொடுக்​கப்​பட்டு அதை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டி​யிருந்தது. அறிக்கை வெளியானதும் காலதாமதத்​துக்கான காரணம் புரிந்தது.

அறிக்கை சுட்டிக்​காட்டிய அபாயங்​களைவிட, அதற்கான தீர்வுகளே அரசுகளுக்கு ஒவ்வாமையாக இருந்தன. மத்திய அரசும், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாநில அரசுகளும் அறிக்கையைக் கடுமையாக எதிர்த்தன. அரசியல் கட்சிகளில் பாஜக முதல் சிபிஐ (எம்) வரை அனைத்து ஆண்ட, ஆள்கின்ற அரசியல் கட்சிகளையும் ஒரு புள்ளியில் ஒருங்​கிணைய வைத்த பெருமை அந்த அறிக்கைக்கு உண்டு.

காட்கில் அறிக்கை ஒரு போலி அச்சுறுத்தல் என்று இகழப்​பட்டது. அதற்கு எதிர்​வினையாக, ‘நாங்கள் ஒன்றும் சோதிடர்கள் அல்ல’ என்றார் காட்கில். அறிக்கை முற்றிலும் அறிவியல் அடிப்​படையில் அமைந்த ஆய்வு முடிவு​களைச் சார்ந்​திருந்தது என்பதுதான் அதன் பொருள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in