மக்களின் கதைசொல்லி

மக்களின் கதைசொல்லி
Updated on
3 min read

ஒரு சிறு​வன் அழுகிறான். அண்​ணன் சமா​தானம் சொல்​கிறான்​... ‘நாளைக்கு அய்​யாகிட்ட சொல்லி அல்வா வாங்​கித் திம்​போம், அழு​காதே.’ அல்வா என்​கிற சொல்​லைக் கேட்​டதும் ஒரு கணம் அழுகை நிற்​கிறது. வயிற்​றுக்​கடுப்பு வந்​த​போது அய்யா வாங்​கிக் கொடுத்த அந்த அல்​வா​வின் சுவை நினை​வுக்கு வரு​கிறது. ஆனால், சுருதி குறைந்​திருந்​தா​லும் அடுத்த கணமே மீண்​டும் அழத் தொடங்​கு​கிறான். அந்​தச் சிறிய தருணத்தை - பசி​யும் ஆசை​யும் குழந்​தைத்​தன​மான தந்​திர​மும் கலந்த அந்த ஒரு கணத்தை - நாற்​பது வருடங்​களுக்​குப் பிறகும் வாசகர்​கள் மறக்​க​வில்​லை. அதை எழு​தி​ய​வர் ச.தமிழ்ச்​செல்​வன்.

‘தமிழ்ச் சிறுகதை​யின் தடங்​கள்’ நூலுக்​காக 2025ஆம் ஆண்​டுக்​கான சாகித்ய அகாடமி விருது பெற்ற அவருடைய வாழ்க்​கை​யும், கரிசல் மக்​களின் வெயிலும் இமயமலைச் சிகரங்​களின் பனி​யும் கலந்த சற்றே பெரிய ஒரு சிறுகதை​தான். திருப்​பங்​கள் பல நிறைந்த அவரது பெரும் பயணத்​தில் இப்​போது, மூன்று மாதத் தாமதத்​துக்​குப் பிறகு, சர்ச்​சைகளைக் கடந்து வந்த ஒரு விருது அவருடைய எழுத்​துப் பயணத்​துக்கு மரி​யாதை செய்​திருக்​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in