அறவாழ்வின் அடையாளம்... | மக்களின் தோழர் நல்லகண்ணு

அறவாழ்வின் அடையாளம்... | மக்களின் தோழர் நல்லகண்ணு
Updated on
3 min read

“நெல்லை சதி வழக்​கில் கைதுசெய்த என்னை போலீ​ஸார் டோணாவூரிலிருந்து களக்​காடு செல்​லும் சாலை​யில் கொண்​டு​சென்​றார்​கள். போகிற வழி​யில் வண்​டியை நிறுத்​திக் கீழே தள்​ளி​விட்​டார்​கள். கீழே கிடந்த என்னை பூட்ஸ் கால்​களால் மிதித்​தார்​கள். எரி​கிற சிகரெட்​டால் என் மீசையைப் பொசுக்​கி​னார்​கள். பொறுக்க முடி​யாத வலி. ஆனாலும், நான் எது​வும் பேச​வில்​லை.

சித்​ர​வதைகள் மேலும் மேலும் அதி​க​மா​யின. காவல் நிலை​யம் கொண்​டு​போ​னார்​கள். அதி​காலை 2 மணிக்கு என்​னுடைய கைகளைக் கட்​டிப்​போட்​டார்​கள். அடுத்த நாள் காலை 10 மணி வரை ரொம்ப நேரத்​துக்​குத் தடி​யால் அடித்​துக் கொண்​டே​யிருந்​தார்​கள். நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​திய பிறகு நாங்​குனேரி சப்​-ஜெயி​லில் ஆறு மாதம் வைத்​திருந்​தார்​கள். காலை நேரத்​தில் காலைக் கடனுக்​காக மட்​டும் கொஞ்ச நேரம் வெளி​யில் திறந்து விடு​வார்​கள். மற்ற நேரமெல்​லாம் இரவு, பகலாக மூத்​திரச் சட்​டி​யுடன் லாக்​-அப் உள்​ளேயே​தான் இருக்க வேண்​டும்”.

நல்​ல​கண்ணு அனுப​வித்த சித்​ர​வதை​களின் சிறு பகு​தி​தான் இவை. இந்​தி​யா​வில் எவ்​வளவோ தலை​வர்​கள் இருந்​திருக்​கி​றார்​கள்; எவ்வளவோ தியாகங்​கள் செய்​திருக்​கி​றார்​கள். ஆனால், நல்லகண்ணு​வின் வாழ்க்​கை​யும், மக்​களுக்​காக அவர் செய்​துள்ள தியாகங்​களும் யாருட​னும் ஒப்​பிட முடி​யாதவை.

உலகெங்​கும் உள்ள தமி​ழர்​கள் இன்று கொண்​டாடிக் கொண்​டிருக்​கும் இந்​தத் தலை​வர், மிகச் சிறு வயதிலேயே தனது பொது​வாழ்க்​கை​யைத் தொடங்​கி​விட்​டார். அப்​போதே தனது வாழ்க்​கைப் பயணம் எப்​படி இருக்க வேண்​டும் என்​பதை நல்​ல​கண்ணு முடிவு செய்​து​விட்​டார்.

<div class="paragraphs"><p>தாயார், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் ஆர்.நல்லகண்ணு.</p></div>

தாயார், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் ஆர்.நல்லகண்ணு.

நல்​ல​கண்​ணு​வின் குடும்​பம் அந்​தப் பகு​தி​யில் ஓரளவு வசதி​யான குடும்​பம்​தான். நல்​ல​கண்​ணுவோடு சேர்த்து 10 பிள்​ளை​கள் என்​றாலும், அனை​வரை​யும் படிக்க வைக்​கும் அளவுக்கு அவரது தந்​தை​யாருக்கு வசதி இருந்​தது. நல்​ல​கண்​ணு​வின் மூத்த அண்​ணன் ஐ.ஆர்​.எஸ். படித்​து, சுங்​கத் துறை​யில் பணி​புரிந்​தார்.

நல்​ல​கண்​ணு​வும் நெல்லை இந்​துக் கல்​லூரி​யில் படித்​தார். அவர் படிப்​பில் ஆர்​வம் மிக்​கவ​ராகத்​தான் இருந்​தார். இன்​னும் ஓரிரு ஆண்​டு​கள் படித்​திருந்​தால், அவரும்​கூட உயரிய அரசுப் பதவி​களுக்​குச் சென்​றிருக்க முடி​யும். ஆனால், நாட்​டில் விடு​தலைப் போராட்​டம் தீவிர​மாக நடை​பெற்​றுக் கொண்​டிருந்த காலத்​தில், படிப்​பைத் தொடர விரும்​பாமல், நாட்டு விடு​தலைப் போராட்​டக் களத்​துக்கு வந்​து​விட்​டார்.

நல்​ல​கண்ணு மீது தொடரப்​பட்ட வெடிகுண்டு வழக்​கு, புனையப்​பட்ட ஒரு வழக்கு என்று அனை​வ​ருக்​குமே தெரிந்​திருக்​கிறது. கம்​யூனிஸ்ட் கட்சி தடை செய்​யப்​பட்​டிருந்த காலத்​தில், அக்​கட்​சிக்​காகத் தீவிர​மாகச் செயல்​பட்ட ஒரு​வரை, முடக்க வேண்​டும் என்​பது​தான் அந்த வழக்​கின் நோக்​க​மாக இருந்​திருக்​கிறது. வழக்​கில் நீதி​மன்ற விசா​ரணை முடிந்​து, தீர்ப்பு சொல்​லும் நாள் நெருங்கி வரு​கிறது. அப்​போது என்ன நடந்​தது என்​பதை நல்​ல​கண்​ணு​வின் சகோ​தரர் இருளப்​பன் கூறுகி​றார்:

‘கம்​யூனிஸ்ட் கட்​சியை விட்டு வில​கு​வ​தாகச் சொன்​னால் வழக்கு ஒன்​றுமே இல்​லாமல் ஆகி​விடும்’ என்று சொன்​னார்கள். இது பற்றி சிறையில் இருந்த அண்​ணன் நல்​ல​கண்​ணுவைப் பார்த்​துப் பேசினோம். எல்​லா​வற்​றை​யும் அமை​தி​யாகக் கேட்​டுக்​கொண்ட அவர், “நம் குடும்​பத்​தில் மொத்​தம் பத்து பேர். வீட்​டுக்​காக நீங்​கள் ஒன்​பது பேர் இருக்​கிறீர்​கள். தயவுசெய்து என்னை என் வழி​யிலேயே விட்​டு​விடுங்​கள். நான் ஒரு​வன் மட்​டும் இல்​லாத​தால் எது​வும் ஆகி​விடப் போவ​தில்​லை. நான் என்​னால் முடிந்த மட்​டும் நாட்டு மக்​களுக்​காக வேலை செய்​கிறேன். அதில்​தான் எனக்கு விருப்​பம் இருக்​கிறது” என்று உறு​தி​யாகச் சொல்​லி​விட்​டார்.

<div class="paragraphs"><p>தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ராமசாமி - கருப்பாயி தம்பதியருக்கு 1925 டிசம்பர் 26 அன்று இரண்டாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 4 சகோதரர்கள், 5 சகோதரிகள். ஸ்ரீவைகுண்டம் காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிப் படிப்பை முடித்தார்.  நெல்லைச் சந்திப்பில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பி.ஓ.எல். இடைநிலை வகுப்புப் (இண்டர்மீடியட்) படித்தார்.</p></div>

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ராமசாமி - கருப்பாயி தம்பதியருக்கு 1925 டிசம்பர் 26 அன்று இரண்டாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 4 சகோதரர்கள், 5 சகோதரிகள். ஸ்ரீவைகுண்டம் காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிப் படிப்பை முடித்தார். நெல்லைச் சந்திப்பில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பி.ஓ.எல். இடைநிலை வகுப்புப் (இண்டர்மீடியட்) படித்தார்.

மீசையை நெருப்​பால் பொசுக்​கிய​போது ஏற்​பட்ட மரண வலியை மறந்​து​விட்​டு, பல மாதங்​களாக மூத்​திரச் சட்டி நாற்​றத்​துடன் லாக்​-அப்​பில் அடைந்து கிடக்​கும் கடும் ரணங்​களை மறந்​து​விட்​டு, உடன் பிறந்​தோர் உருக்​கத்​துடன் கெஞ்​சுவதைப் புறக்​கணித்​து​விட்​டு, ‘என் வாழ்​வும், பணி​யும் மக்​களுக்​காகவே’ என்று ஒரு​வர் தெளி​வாக​வும், உறு​தி​யாக​வும் முடிவு எடுக்​கி​றார் என்​றால், அவர் மக்​களுக்​காகத் தொண்டு செய்​வ​தில், தியாகம் செய்​வ​தில் எவ்​வளவு உறு​தி​கொண்ட மனித​ராக இருந்​திருக்​கி​றார் என்​பதை யாராலும் புரிந்​து​கொள்ள முடி​யும்.

மக்​களுக்​காக அர்ப்​பணித்​துக்​கொண்ட தனது வாழ்​வை, மக்​களுக்​காகவே முழு​மை​யாக வாழ்ந்​திருக்​கி​றார் நல்​ல​கண்​ணு. நாட்​டின் விடு​தலைப் போராட்​டத்​தை​யும், மக்​களுக்​கான சமூக விடு​தலைப் போராட்​டங்​களை​யும் ஒருங்​கிணைத்து அவர் நடத்​தி​யிருக்​கி​றார்.

<div class="paragraphs"><p>தமிழ்நாட்டுக்கும், தமிழின் வளர்ச்சிக்கும் பாடுபட்ட நல்லகண்ணுவின் பணிகளைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 2022ஆம் ஆண்டு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டது. சுதந்திர தின விழாவில் இந்த விருதை நல்லகண்ணுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவப்படுத்தினார். இந்த விருதுடன் தனக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்ச ரூபாயுடன், தனது பணம் ரூ.5,000 சேர்த்து தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக நல்லகண்ணு திரும்பி கொடுத்துவிட்டார்.</p></div>

தமிழ்நாட்டுக்கும், தமிழின் வளர்ச்சிக்கும் பாடுபட்ட நல்லகண்ணுவின் பணிகளைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 2022ஆம் ஆண்டு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டது. சுதந்திர தின விழாவில் இந்த விருதை நல்லகண்ணுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவப்படுத்தினார். இந்த விருதுடன் தனக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்ச ரூபாயுடன், தனது பணம் ரூ.5,000 சேர்த்து தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக நல்லகண்ணு திரும்பி கொடுத்துவிட்டார்.

அரசி​யல், சமூக, பொருளா​தார, இலக்​கி​யத் துறை​களில் அறி​வுசார் ஆளு​மை​களோடு ஆழமாக விவா​திக்​கும் திற​னைப் பெற்​றிருந்த ஆர்​.என்​.கே. அது பற்றி எப்​போதுமே பெரு​மிதம் அடைந்​த​தில்​லை.

“நாம் பெற்​றுள்ள அறிவு யாவும் இந்த சமு​தா​யத்​திட​மிருந்து கற்​றது; அந்த அறிவை இந்த சமு​தா​யத்​தின் உறுப்​பினர்​களான மக்​களின் மேம்​பாட்​டுக்​காக மட்​டுமே பயன்​படுத்த வேண்​டும்; நம்​மிடம் காணப்​படும் அறிவு என்​பது மக்​களுக்​குப் பயனுள்​ள​தாக இருக்க வேண்​டும். மாறாக, நம் அறிவு வளம் என்​பது செருக்​காக அல்​லது பகட்​டாக வெளிப்​பட்​டால், சாமானிய மக்​கள் மிரட்சி அடைந்து நம்​மை​விட்டு ஒதுங்​கி, வில​கிச் சென்று விடு​வார்​கள்” என்று எச்​சரிக்​கி​றார் அவர்.

நல்​ல​கண்​ணு​வின் அறம் சார்ந்த வாழ்க்கை பொது​வாழ்​வில் ஈடு​படு​பவர்​களுக்கு மட்​டுமல்ல, பொது​மக்​கள் அனை​வ​ருக்​கு​மான முன்​னு​தா​ரணம்; அவருடைய அறவாழ்வு என்​பது ஓர் அடை​யாளம்; அறம் சார்ந்த விழு​மி​யங்​களோடு வாழ விரும்​பும் அனை​வ​ருக்​கும் ஆர்​.என்​.கே.வின் வாழ்க்கை இன்​னும் பல காலத்​துக்கு வழி​காட்​டும் வெளிச்​ச​மாகத் திகழும் என்​பது நிச்​சயம்.

அறவாழ்வின் அடையாளம்... | மக்களின் தோழர் நல்லகண்ணு
T20 WC 2026 தொடரில் இருந்து இலங்கையை வெளியேற்றியது நியூஸி: சூப்பர் 8 ஆட்டத்தில் அபார வெற்றி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in