நல்லியல்புகள் மலரும் தருணம் | கதை அறியும் கலை

நல்லியல்புகள் மலரும் தருணம் | கதை அறியும் கலை
Updated on
2 min read

மனிதர்​களிடம் உறை​யும் பலவித​மான மனக் கோலங்​களைப் பிரபஞ்சன் தம் கதைகளின் ஊடே நுட்​ப​மாக வெளிப்​படுத்​தி​யுள்​ளார். எனினும், மனிதத்​தின் நற்​பண்​பு​களை அவர் மொழி​யாளும்​போது அக்​கதைகள் பேராழம் கொண்டு விடு​கின்​றன; அதற்கு ‘எனக்​கும் தெரி​யும்’ என்​னும் அழகிய படைப்பே சான்​று.

மூர்த்​திக்​குத் தூரத்து உறவில் பெண் பார்க்​கிறாள் தாய். வறுமை​யின் பிடி​யில் சிக்​கி​யிருக்​கும் அக்​குடும்​பத்​தின் எளிய சூழலைக் கண்​டதும், தன் மகனுக்​குக் கிடைக்​கக்​கூடிய நூற்​றுக்​கணக்​கான பவுன் நகைகளும் காரும் தப்​ப​விடக் கூடாதெனத் துடிக்​கிறாள்.

அதேவேளை​யில், பெண் வீட்​டார் தங்​களையே நம்​பிக் காத்​திருந்து நல்​லதொரு வாய்ப்பை இழந்​து​விடக் கூடாது என்​ப​தற்​காக, இப்​போதைக்​குத் திரு​மணம் சாத்​தி​யமில்லை என்ற செய்​தி​யைத் தெரி​வித்து வர மூர்த்​தியை அனுப்​பு​கிறாள். பெண்ணை நிராகரிக்​கும் அச்​செய்​தி​யோடு சுகுணா​வின் இல்​லத்​துக்​குச் செல்​லும் மூர்த்​தி, அந்த ஒற்​றைச் சந்​திப்​பில் முற்​றி​லும் புதி​யதொரு மனித​னாக உரு​மாறுகிறான்; இதுவே இக்​கதை​யின் உயிர்ச்​சரடு.

நிராகரிப்​பின் சொற்​களை எவ்​வாறு வெளிப்​படுத்​து​வது எனத் தன் மனதுக்​குள் உத்​தி​களை ஆயத்​தப்​படுத்​துகிறான் மூர்த்​தி. தன் மகளின் திரு​மணத்​தின்​போது மாப்​பிள்ளை வீட்​டார் வீடற்ற நிலைக்​குத் தங்​களை உறிஞ்​சி​விட்​ட​தாகக் குமுறிய அதே தாய்​தான், இங்​கே​யும் சோமு மாமா​வின் பிணைப்பு வேண்​டா​மென மறுக்​கிறாள். மாம​னார் வீட்​டுக்​குச் செல்​லும்​போது அரிசி, பருப்​பு, உப்​பு, புளியென மூட்டை மூட்​டை​யாய்ச் சுமந்து செல்​லும் நிலை வந்​து​விடும் என்ற நடை​முறைச் சூழலைச் சொல்​லி, திரு​மணத்தை மறுத்து வரு​மாறு மகனை வழியனுப்​பு​கிறாள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in