ஒன்றை விரித்து வேறொன்றைத் தொடும் உருவகக்கலை | கதை அறியும் கலை

ஒன்றை விரித்து வேறொன்றைத் தொடும் உருவகக்கலை | கதை அறியும் கலை
Updated on
2 min read

கவியரசு கண்​ண​தாசன் அபூர்​வ​மான, ஒன்​றைச் சொல்லி வேறொன்றை உணர்த்​துகிற உரு​வகப்​பாணி​யில் ‘முடி​வின் தொடக்​கம்’ என்ற கதையை எழு​தி​யிருக்​கிறார். கார்​சியா மார்க்​வெஸ் தன் ‘நூற்​றாண்​டு​காலத் தனிமை’ நாவலில் கற்​பனை​யான உலகில் கதையை நிகழ்த்தி இன்​றைய வாழ்க்​கையை விமர்​சிப்​ப​தற்​குப் பல ஆண்​டு​களுக்கு முன்​பே, கண்​ண​தாசன் இக்​கதை​யில் அதனைச் சாதித்​திருக்​கிறார்.

அதி​கார ஆணவம்: ‘அ’, ‘ஆ’, ‘இ’, ‘ஈ’ என்ற நான்கு நாட்​டுத் தலை​வர்​களிடையே தான்​தான் பெரிய​வன் என்ற ஆணவம் தலை​தூக்​கு​கிறது. பாது​காப்​பாகப் பதுங்​கிக்​கொண்டு அவர்​கள் ஏவிய படைகளால் கோடானுகோடி மக்​கள், கட்​டிடங்​கள், பறவை​கள், விலங்​கு​கள் என அனைத்​தும் அழிகின்​றன. அழிவை நிகழ்த்​திய நால்​வரும் வெளியே வந்து தங்​கள் ஆற்​றலைப் பெரு​மை​யுடன் பேசிக்​கொள்​கின்​றனர். பின், தங்​களின் சொந்த உறவு​களும் போரில் மடிந்​ததைக் கண்டு திகைக்​கின்​றனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in