விஷத்தை அமுதமாக்கும் கலை | கதை அறியும் கலை

விஷத்தை அமுதமாக்கும் கலை | கதை அறியும் கலை
Updated on
2 min read

குடும்ப உறவு​களின் மிக நுண்​ணிய பிரதேசங்​களுக்​குள் ஆழமாகத் தேடிச் சென்​று, அதன் சிக்​கல்​களைத் தொட்​டுத் திறப்​பதே லா.ச.ராமாமிருதத்​தின் எழுத்​தி​யக்​கம். வாழ்​வின் கசப்​பு​களை உட்​செரித்​து, அமுத​மாகப் பொங்​கும் ஒரு மகத்​தான கணத்​தைச் சித்​தரிக்​கும் உன்​னதக் கதைகளுள் ஒன்று ‘கொட்டுமேளம்’.

தன்​னலமற்ற தியாகம்: சந்​துரு ஒரு நடுத்​தரக் குடும்​பத்​தின் தலைமகன். தந்தை இல்​லாத நிலை​யில், பொறுப்​பு​கள் அனைத்​தும் அவன் தோள்​களில் விழுகின்​றன. தன் மூன்று சகோ​தரி​களுக்​கும் திரு​மணம் செய்து முடித்த பிறகே தான் திரு​மணம் செய்​து​கொள்​வேன் என்ற வைராக்​கி​யத்​துடன் உழைக்​கிறான். ஆனால், அவனது திரு​மணத்​துக்கு முன்பே மூத்த சகோ​தரி ஜானா விதவை​யாகி மீண்​டும் அண்​ணன் வீட்​டுக்கே அடைக்​கல​மாக வரு​கிறாள். அவளது எதிர்​ காலத்​துக்​காக அவளைத் தொடந்துபடிக்க வைக்​கிறான் சந்​துரு.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in