சிறப்புக் கட்டுரைகள்
இருத்தலின் தத்தளிப்புகள் | கதை அறியும் கலை
கரிச்சான் குஞ்சு உள்ளத்தின் விநோதத்தன்மையைத் திறக்க முயன்ற எழுத்தாளர். அவரது கதைகளில் மேலதிகமாக ஏதோ ஒன்று இல்லாது இருப்பதும், உதாரண கிளைக் கதை லேசாக ஒட்டிக் கொள்வதும் உண்டு.
இந்த பலகீனங்களை மீறி நல்ல கதைகள் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று ‘சம்பாத்தியம்’. அப்பாச்சம் ஓர் ஏழை இளைஞன். எஸ்.எஸ்.எல்.ஸி வரை படித்தவன். விளையாட்டில் பெரிய சூரன். எல்லா பந்தயங்களிலும் வெற்றியைத் தட்டிக்கொண்டு வருபவன். அவனது கனவுக்கு ஏற்ப யாரும் வழிகாட்டவோ, தானே வழிதேடிக்கொள்ளவோ அறியாத சூழலில் வளர்ந்தவன். அவனைப் பற்றிய இக்குறிப்பு ஒரு பலமான சித்திரத்தைக் காண உதவுகிறது.
