

‘தமிழ் நூல்களை உலகுக்குக் கொண்டு செல்ல வேண்டும்; அதேபோல பிற மொழி நூல்களைத் தமிழுக்குக் கொண்டு வர வேண்டும்’ என்ற உயரிய நோக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு, பன்னாட்டுப் புத்தகக் காட்சியை முன்னெடுத்து நடத்தி வருகிறது. வேறெந்த நாட்டிலும் மாநிலங்களோ பிரதேசங்களோ பன்னாட்டுப் புத்தகக் காட்சிகள் நடத்தி இருக்குமா என்பது சந்தேகமே.
கடந்த 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் நம்நாட்டுப் பதிப்பாளர்களும் முகவர்களும் பங்கேற்றனர். உலகப் புகழ்பெற்ற ஃபிராங்க்பர்ட், லண்டன், ஷார்ஜா புத்தகக் காட்சிகள் அளவுக்கு தரத்திலும் சிறப்பான அளவில் தமிழ்நாடு அரசு கோலாகலமாக நடத்தியுள்ளது.