

ஒரு காலத்தில் கடிதங்களே தகவல் தொடர்புக்கு முக்கியமான வழியாக இருந்தன. பெரும்பாலான கடிதங்கள் தனிப்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்தும் விதத்திலேயே எழுதப்பட்டன. ஆனால், சிலர் கடிதங்களிலும் இலக்கியத்தை, வரலாற்றை எழுதி ‘கடித’ இலக்கியத்தைப் படைத்திருக்கின்றனர்.
ஒரு காலத்தின் சமூக நிலை, அரசியல் சிந்தனை, பண்பாட்டு மரபு, எழுத்தாளரின் தனிப்பட்ட எண்ணங்களை அறிய உதவும் முக்கியமான இலக்கிய வடிவமாக கடித இலக்கியம் திகழ்ந்தது.
அதனால் இது இலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் மதிப்புமிக்க ஆதாரமாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட கடித இலக்கியங்களில் உலகப் புகழ்பெற்றது நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள்.