Published : 03 Oct 2022 06:50 AM
Last Updated : 03 Oct 2022 06:50 AM

ப்ரீமியம்
முன்கை எடுக்க வேண்டிய தலைமை ஆசிரியர்கள்

சு.உமாமகேஸ்வரி

அரசுப் பள்ளிகளின் மேம்பாடு கருதிப் பல திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை எடுத்துவருகிறது. தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்புகளை வளர்க்கும் பயிற்சி முதற்கட்டமாக ராஜபாளையத்தில் ஒருவார காலத்துக்குச் சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் இப்பயிற்சி எல்லாத் தலைமை ஆசிரியர்களுக்கும் எடுத்துச் செல்லப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தேவை தலைமைப் பண்பு: இன்றைய சூழலில் தலைமை ஆசிரியர்களுக்கு இது மிகவும் அவசியமான பயிற்சிதான். ஒரு பள்ளியின் வளர்ச்சியில் அனைவருக்கும் பங்கு உண்டு என்றாலும், தலைமை ஆசிரியரின் பங்கு மிக இன்றியமையாதது. தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஓராசிரியர் அல்லது ஈராசிரியர் பள்ளிகள்தாம். அங்கு வேலைகளைப் பங்கிட்டு அனுசரித்து, மாணவர்கள் நலன் சார்ந்து இயங்கும் நிலைமை பெரும்பாலும் உள்ளது. ஆனால் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் என்று உயர உயரப் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாகப் பிரச்சினைகள் உருவாகின்றன. ஆசிரியர்களுக்குள் ஒற்றுமையின்மையை உருவாக்கும் தலைமைகளும் உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x