Last Updated : 01 Apr, 2022 07:25 AM

 

Published : 01 Apr 2022 07:25 AM
Last Updated : 01 Apr 2022 07:25 AM

ப்ரீமியம்
எந்தப் புள்ளியில் இருக்கிறது கரோனாவின் முடிவு?

இரண்டு ஆண்டுகளாகச் சற்று வெறிச்சோடியிருந்த தூத்துக்குடி விமான நிலையம், இப்போது ஊர்ச்சந்தை போலாகிவிட்டது. அதேபோல், நெல்லையில் எல்லா இடங்களிலும் அப்படி ஒரு கூட்டம். தாமிரவருணி படித்துறையில், நெல்லையப்பர் கோயில் பிரகாரத்தில், அந்தோணியார் தேவாலயத்தில், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்துக்கான அல்லோலகல்லோலக் கூட்டத்தில், புத்தகக்காட்சியில், பூப்புனித நீராட்டு விழாவில், தேநீர்க் கடைகளில், சிறிதும் பெரிதுமாக எக்கச்சக்கமாய் முளைத்திருக்கும் அனைத்து உணவு விடுதிகளிலும் ஏராளமான கூட்டம்.

சந்தித்த பல நண்பர்கள் கேட்ட ஒரே கேள்வி, ‘‘கரோனா அவ்வளவுதானே… இனி வராதில்ல?’’ தங்களின் ஊகம் அங்கீகரிக்கப்பட்டுவிடும் என்கிற அசாத்திய நம்பிக்கையைத் தாண்டி, எதையும் ஆராய்வதில் யாருக்கும் விருப்பமில்லை. ‘‘நாலாவதெல்லாம் நமக்கு வராதுல. நாந்தான் அப்பவே சொன்னேம்லா’’ என இப்பவும் பரபரப்பாய்ப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மார்ச் 24-ல் வெளியான பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் 4-ம் அலைக்கான ஆய்வறிக்கை சில செய்திகளைச் சொல்லியுள்ளது. அந்தக் கட்டுரையில் பேசியிருப்பது ‘டெல்டாக்ரான்’ எனும் கரோனாவின் புதிய வேற்றுரு பற்றி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x