ரொமீலா தாப்பர் பேசுகிறார்... இந்து மதமும் இந்துத்துவமும் ஒன்றல்ல!

ரொமீலா தாப்பர் பேசுகிறார்... இந்து மதமும் இந்துத்துவமும் ஒன்றல்ல!
Updated on
2 min read

நாகரிகங்களில் உயர்ந்தது நம்முடையது எனும் கருத்தாக்கத்தைப் பற்றி?

வரலாற்று விவாதங்கள் வரவேற்கப்பட வேண்டி யவை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ‘ஆரியர்கள்’ எனும் தலைப்பு தற்போது அரசியலாக்கப் பட்டுள்ளது. ஆரியக் கலாச்சாரத்தின் மேலாதிக்கத் தையோ, இந்திய மண்ணில்தான் ஆரியர்கள் உதித் தார்களா போன்ற கேள்விகளையோ யார் எழுப் பினாலும் உடனடியாகச் சமூக வலைதளங்களில் அவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். இதனால் ஆரோக்கியமான வரலாற்று விவாதங் களுக்கு இடமில்லாமல் போகிறது.

கலாச்சாரத் தேசியம் என்பதற்கு அர்த்தம், தேசியமயமாக்கப்பட்ட கலாச்சாரம் என்பதுதானே? அதாவது, ஒரே ஒரு கலாச்சாரம் மட்டுமே உள்ளது எனச் சொல்வதுதானே?

சமகாலப் பாரம்பரியம் எதுவும் அசலானது இல்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் தோன்றிய பாரம்பரியங்களில் கூட ஏதோ ஒரு கட்டத்தில் இடையூறு நிகழ்ந்துள்ளது.

ஆனால் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் முதன்முறையாக இந்துக் கலாச்சாரத்தின் வேர்களைத் தேடும்பணி முடுக்கிவிடப்பட்டது. அப்போது உதித்ததுதான் மத தேசியவாதம். அதிலிருந்து எழுந்ததுதான் ஆரியர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் எனும் கருத்தாக்கம் (Indigenous Ariyanism). அதற்கு முன்புவரை ஒற்றைக் கலாச்சாரத்தைத் தேடும் முயற்சி நடைபெறவில்லை.

மத தேசியவாதம், கலாச்சாரத்தின் பன்முகத்தன் மையை மறுத்தது. ஒரே ஒரு கலாச்சாரத்தைத் தேர்ந்தெடுத்து அதுவே தேசியக் கலாச்சாரம் என்று மகுடம் சூட்டியது. உலகம் முழுக்கத் தேசியவாதத்தின் தன்மை இதுவே.

ஒரு மதம், ஒரு கலாச்சாரம், ஒரு மொழி என ஒற்றைப் பரிமாணத்தை மட்டுமே முன்னிறுத்துவதுதான் சமய தேசியவாதத்தின் முக்கிய அம்சமாகும். அரசியல் ஆதரவைத் திரட்டவே இத்தகைய முயற்சிகள் பெரும்பாலும் நடைபெறுகின்றன. இதற்குச் சிறந்த உதாரணம் இந்துத்துவம். பல ஆய்வாளர்கள் ஏற்கெனவே சொன்னதுபோல, இந்து மதமும் இந்துத்துவமும் ஒன்றல்ல. இந்து என்பது மதம். ஆனால், இந்துத்துவம் என்பது அரசியல் சித்தாந்தம். இந்து மதத்தின் சில அம்சங்களை மட்டுமே தன்னகப்படுத்திக்கொண்ட நவீன சித்தாந்தம்தான் இந்துத்துவம். 20-ம் நூற்றாண்டில் தோன்றிய இக்கருத்தியலின் குறிக்கோள் இந்து அரசாட்சியை நிறுவுவது. அதற்காக இந்துக்களைத் திரட்டுவது.

ஒரு மதத்திலிருந்து அரசியல் சித்தாந்தத்தைக் கட்டமைக்கும் போது, அம்மதத்தின் சாரத்தையே மாற்றி அமைப்பதும் உண்டு. இப்படித்தான் இந்துத்துவம் தேசத்தின் எல்லை, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைப் புனித நூல், ஒரே மூதாதையரின் பரம்பரை போன்ற சட்டகங்களை நிர்ணயித்தது. இவை அல்லாதவை அனைத்தும் அந்நியம் என்றது. சமூக மற்றும் அரசியல் அணி திரட்ட இது எளிய முறையாகும். இத்தகைய இந்துத்துவத்துக்கு நான் வைத்த பெயர் ‘ஆட்சிக் குழு இந்து மதம்’.

ஆதிக்கக் கலாச்சாரங்களை ஆதரிப்பவர்க ளுக்கு இந்தப் போக்கினால் சிக்கல் இல்லை. ஆனால், காலங்காலமாக புறக்கணிக்கப் பட்டவர்களின் நிலை என்ன? பிற கலாச்சாரங்களின் தனித்துவத்தை அங்கீகரித்துத் தன்னுடன் அரவணைத்துச் செல்வதுதானே தேசியக் கலாச்சாரமாக இருக்க முடியும்? அதிலும் தேசிய வாதம் நிறுவப்பட்ட காலகட்டத்தில் நியாயமான அங்கீகாரம் மறுக்கப்பட்ட பழங்குடியினர், தலித்துகள், நடுத்தர மக்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர்கள் போன்றவர்களுக்கு இப்போது நியாயம் சேர்க்கப்பட வேண்டும். சமயச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவில், பன்முகத்தன்மையை இணைத்து வரலாற்றைப் பகிர்ந்தளிப்பதே சரியான தேசியக் கலாச்சாரமாக இருக்க முடியும்.

அதிகார மையத்தை அதிலும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவே சமூகத்தின் ஒரு அங்கத்தினர் ஒற்றைக் கலாச்சாரக் கோஷங்களை எழுப்புகின்றனர் என்பது புரிகிறது. இது வரலாற்று ஆய்வையும் பாதிக்கிறதல்லவா?

ஆம்! வரலாற்று ஆய்வுகளுக்கு இது ஒரு இடையூறுதான். ஆனால், நாங்கள் ஆய்வில் இறங்கிய பின் பன்முகத்தன்மை தொடர்ந்து வெளிக்கொணறப்பட்டன. உதாரணத் துக்கு, தேசியவாதம் எனும் குடைக்குள் பல அம்சங்கள் உள்ளன. ஆனால், தேசியவாதத்தைக் கேள்விக்குள்ளாக்கினாலே தேசப்பற்று அற்றவர் என அரசியல்வாதிகளும் பொதுமக்களும் முத்திரை குத்துவதால் இது விவாதிக்கப்படாமலேயே இருக்கிறது.

மத தேசியவாதத்துக்கும் மதச்சார்பற்ற தேசிய வாதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதலில் மதச்சார் பின்மையைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா மதத்தினரும் ஒரே சமூகத்தில் கூடி வாழ்கின்றனர் என்பதால், அது மதச்சார்பற்ற சமூகம் ஆகிவிடாது. அனைத்து மதத்தினருக்கும் சமமான அந்தஸ்து இங்கு உள்ளதா? மறுபுறம் மதச்சார்பின்மை என்றால் என்ன எனும் கேள்வி உள்ளது.

கத்தோலிக்க தேவாலயத்தின் இறையாட்சியைத் தகர்த்து, மக்களாட்சியைக் கோரியதுதான் ஐரோப் பாவில் மதச்சார்பின்மை. ஆனால், இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை தேவாலயத்தின் பிடியில் அரசு ஆட்டிவைக்கப்படவில்லை. இருந்த போதும் சமயச் சடங்குகள் வழியாகவும் சாதியப் படிநிலைகள் மூலமாகவும் மதம் கோலோச்சியது.

என்னைக் கேட்டால், அரசியல் மற்றும் சமூகத்திலிருந்து மதத்தைத் தள்ளிவைப்பதுதான் சரியான மதச்சார்பின்மையாகும்.

பலதரப்பட்ட அடையாளங்கள் என்கிறீர்களா?

நான் அதைத் ‘திறந்த அடையாளங்கள்’ என்பேன். என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு பெரும்பான்மைச் சமூகமோ, அடையாளமோ நிரந்தரமாக மேலாதிக்கம் செலுத்துவது நியாயமான ஜனநாயகம் அல்ல. அதேபோல, பெரும்பான்மை எனும் கருத்தியலை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. அது நெகிழ்வுத்தன்மை கொண்டது. அதிலும் மதச்சார்பற்ற சமூகத்தில் மேலாதிக்க மத அடையாளங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. -

தொடரும்..

தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா

© ஃப்ரண்ட்லைன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in