

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு கிராமத்துப் பள்ளி மாணவனாக, ‘யுனெஸ்கோவின் (ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம்) தலைமையிடம் எங்கே உள்ளது?’ என்ற விநாடிவினா கேள்விக்கு ‘பாரிஸ்’ என்று சரியாகப் பதில் சொல்லி 10 மதிப்பெண் பெற்றபோது, எனக்கு ஏற்பட்ட பரவச உணர்வு வார்த்தையில் அடங்காதது.
அதைப் போல 10 மடங்கு பரவசம் - உலக நினைவுப் பதிவேட்டுத் திட்டத்தில் திருக்குறளைச் சேர்ப்பது தொடர்பாக, பாரிஸ் நகரில் யுனெஸ்கோவின் இந்தியாவுக்கான நிரந்தரக் குழுவின் தூதராக இருக்கும் விஷால் சர்மாவை அக்டோபர் 13 அன்று சந்தித்து உரையாடியபோது ஏற்பட்டது.