

லைட்டை ஆஃப் பண்ணி, டோரை லாக் பண்ணி, பைக்கை ஸ்டார்ட் பண்ணி, ஸ்பாட்டை ரீச் பண்ணி, கெஸ்ட்டை மீட் பண்ணி, இப்படியே பண்ணிப் பண்ணித் தமிழர்கள் தற்காலத் தமிழை ‘பண்ணி’ மொழி ஆக்கிவிட்டதாகச் சற்று முந்தைய மேடைகளில் பேசப்பட்ட பேச்சு, விரவலான பேச்சு. நல்லது; தமிழ் ‘பண்ணி’ மொழிதான். தற்காலத் தமிழ் மட்டுமல்லாது, முற்காலத் தமிழும்.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்புஎன்ன நின்ற நெடுமாலே... - (திருப்பாவை 25)