சாகும்வரை சிறைவாசம் சரியா?

சாகும்வரை சிறைவாசம் சரியா?
Updated on
3 min read

வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தொடர்பாக, சட்டரீதியிலும் சமூகரீதியிலும் நீண்ட போராட்டத்தை எதிர்கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற ஒரு நெடிய, மக்கள் பொதுக் கருத்தாக வாழ்நாள் சிறைவாசிகளின் விடுதலைக் கோரிக்கை எழுந்ததில்லை. மனித உரிமைப் பார்வையில் சிறைவாசிகளின் முன்விடுதலை பார்க்கப்படுவது இல்லை. பெரும்பாலும் பொதுச் சமூகத்தில் அதுகவனம் பெறுவதில்லை; சிறைவாசிகளின் தனிப்பட்ட குடும்பம் சார்ந்த போராட்டமாக மட்டுமே சுருக்கப் படுகிறது.

மறையும் நம்பிக்கை வெளிச்சம்: தேசி​யக் குற்ற ஆவணப் பதிவேட்​டின் 2019ஆம் அண்டு அறிக்கை​யின்​படி, நாட்டில் தண்டனை சிறை​வாசிகளில் 53 சதவீதத்​தினர் ஆயுள் சிறை​வாசிகள். நமது நாட்​டின் வளர்ச்சிக்கு ஏற்பச் சிறை​கள் விரிவுபடுத்​தப்​பட​வில்லை. இடநெருக்​கடி, காலனிய காலப் பழமைவாத நடைமுறை​கள், சுகா​தா​ரச் சீர்​கேடு​கள் தொடர்​கின்றன. வளர்ந்த சமூக நிலைக்கு ஏற்பச் சிறைத் துறை தன்னைத் தகவமைத்​துக்​கொள்ள​வில்லை. ஒரு சராசரி ஆயுள் சிறை​வாசி குறைந்த​படசம் 14 ஆண்டு​கள் தனது வாழ்​நாளை அங்கு கழிக்க வேண்​டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in