லலய் சிங்: வடக்கில் ஒரு முற்போக்காளர்!

லலய் சிங்: வடக்கில் ஒரு முற்போக்காளர்!
Updated on
3 min read

வட இந்தியாவில் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள், முற்போக்குக் கொள்கைகள் எந்த அளவுக்குத் தாக்கம் செலுத்துகின்றன என்பது தொடர்பான விவாதங்கள் தமிழ்ச்சூழலில் அவ்வப்போது எழுகின்றன. வட இந்தியாவின் பல நகரங்களுக்குப் பெரியார் நேரடியாகப் பயணம் மேற்கொண்டு பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த தலித் அமைப்பினர், தலைவர்கள் பெரியாரைச் சமூக விடுதலைப் போராளியாகவே கருதியது வரலாறு.

அம்​பேத்​கரின் மகன் யஷ்வந்த் அம்பேத்கர், ராவ் பகதூர் ந.சிவராஜ் உள்ளிட்டோர் தொடங்கிய இந்தியக் குடியரசுக் கட்சி, பல முறை பெரியாரை அழைத்து மும்பையில் கூட்டம் நடத்தி​யிருக்​கிறது. “பெரியார் தமிழ்​நாட்டுக்கு மட்டும் தலைவர் அல்ல. இந்தியாவில் உள்ள தாழ்த்​தப்​பட்ட, பிற்படுத்​தப்​பட்ட, ஒடுக்​கப்பட்ட மக்கள் அனைவருக்​குமான தலைவர்” என்று வட இந்திய தலித் தலைவர்கள் போற்றி​யிருக்​கின்​றனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in